டெல்லி: எக்ஸ் தளத்தில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்கள். அதாவது நாம் யாருடைய போஸ்ட்டையாவது லைக் செய்தால் அதேசமயம், அது வெளியே தெரியக் கூடாது என்றால் அதை பிரைவேட் லைக் ஆக மாற்றிக் கொள்ளலாம். அப்படிச் செய்யும்போது நாம் செய்யும் லைக் வெளியில் தெரியாது.
இந்த லைக்கை மறைக்கும் வசதி ஏற்கனவே எக்ஸ் தளத்தின் ப்ரீமியம் சப்ஸ்கிரைபர்களுக்கு உள்ளது. தற்போது அனைவருக்குமே இதை டிஃபால்ட் ஆக்கி விட்டார்கள். இதனால் யாருக்காவது நீங்கள் லைக் கொடுத்தால் அது வெளியே தெரியாது. இதுகுறித்து எலான் மஸ்க் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில், நாம் யாருக்காவது லைக் செய்தால், அப்படி செய்ததற்காகவே, நாம் சிக்கலுக்குள்ளாகும் தர்மசங்கட நிலையைத் தவிர்க்க மக்களுக்கு இதுபோன்ற வசதி செய்து தர வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்புதான் இந்த மாற்றம் குறித்து எக்ஸ் தளத்தின் என்ஜீனியரிங் பிரிவு இயக்குநர் ஹபோய் வாங்க் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், பயனாளர்கள் பலரும், லைக் செய்த காரணத்தாலேயே டிரோல் செய்யப்படுவதும், அவர்களுக்கு எதிராக விஷமத்தனமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதையும் நாங்கள் அறிந்தோம். இதை சரி செய்யவே இந்த புதிய மாற்றம் வந்துள்ளது. நாம் யாருடைய போஸ்ட்டை லைக் செய்தோம் என்பதை நாம் பார்க்க முடியும். அதேசமயம், நாம் லைக் செய்ததை மற்றவர்கள் பார்க்க முடியாது என்றார் அவர்.
டிவிட்டர் தளத்தை வாங்கியது முதலே பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க். இது பல நேரங்களில் சர்ச்சையைக் கிளப்பினாலும் கூட அது பின்னர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்த லைக்கை மறைக்கும் வசதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனிமேல் சுதந்திரமாக நமக்குப் பிடித்த டிவீட்டுகளை லைக் செய்யலாம்.. நாம் லைக் செய்வதை யாராலும் பார்க்க முடியாது, தேவையில்லாத டிரோல்களையும் தவிர்க்கலாம்.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}