தனிமை!

Mar 20, 2026,02:24 PM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


தனிமை என்பது கொடுமைதான் ....

விரும்பி இருப்பது ஓய்வுதான்...

படைப்பாளிக்கு சிந்தனைதான்...

பெற்றோருக்கு கடினம்தான்..

முதியோர்களுக்கு  நரகம்தான்..

முதியோர் இல்லங்கள் நிறையும்தான்...

பிள்ளைகள் கொடுக்கும் பரிசுதான்..


இமைபோல் காப்பவள் தாய்தானே....

அயரா உழைப்பால் வளர்ப்பவர் தந்தைதானே..

பெற்றோர் அன்பை வெல்லவே 

உலகில் எவரும் இல்லையே...

பிள்ளைகள் அன்பு  என்பது

எதுவரை என்பது தெரியல...

அனைத்து பிள்ளைகளுக்கும் 

பொருந்தாது.... 




தாய் தந்தையின் அன்பு சொர்க்கம்தான்...

கலப்படம் என்பது இல்லைதான்....

பிள்ளைகள் அன்பில் போட்டிதான்...

சிறுவயதில் உண்மைதான்...

வளர்ந்தபின் மாற்றம்தான்...

ஆண்,பெண் பேதமில்லை தான்...


உந்தன் பிள்ளை கண்டிடும் இன்று 

இந்த காட்சிதான்....

நாளை உனக்கு தொடரும்தான்...


பிள்ளைகள் மனதில் செயல்கள்தான் 

பசுமரத்தானி தான்...

நல்ல செயல்களை செய்திடு ... 

சிறந்த விதையாய் விதைத்திடு...

தாயும் மாமியாரும் அம்மாதான் ... 

தந்தையும் மாமனாரும் அப்பாதான் ... 


நாளை நாமும் அடைவோமே இப்பதவிதான்....

உலகம் இருக்குது பரந்து விரிந்துதான்...

வாழ்கை  அதிலே ஒரு புள்ளிதான்..

சுயநலம்  தூக்கி எறிந்திடுவோம் .. 

நம் குடும்பம் தழைக்க செய்திடுவோம்...

மூத்தோரை  பேணிக்

காத்திடுவோம்.. 

மனமார வாழ்த்த வாழ்ந்திடுவோம்...

தனிமை என்பது கொடுமைதான் .. 

அதை தூக்கி எறிந்தால் இனிமைதான்.


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்