சிரிப்பு வருதா.. சிரிங்க பாஸ்.. நல்லா வாய் விட்டு சிரிங்க.. உடம்புக்கு நல்லது!

Mar 19, 2026,03:20 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற புகழ்பெற்ற  பழமொழியின் சிறப்பை இன்றைய நாளில் கொண்டாடுவோம்.


மனமகிழ்ச்சியுடன் வாய்விட்டு சத்தமாகச் சிரிப்பது, மன அழுத்தம் மற்றும் கவலைகளைப் போக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்களைக் குறைக்கிறது என்று  மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. 


National Let's Laugh Day (தேசிய சிரிப்பு நாள்) 


தேசிய சிரிப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 19 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மகிழ்ச்சியாக சிரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகிறது.


சிரிப்பு மனிதனின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு இயற்கை மருந்தாகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பார்க்க வேண்டும். கவலைகளையும், நோய்களையும் தூர எறிய தினமும் வாய்விட்டு சிரிப்போம்.


சிரிப்பதால் உடல்நலம் மற்றும் மனநலம் மேம்படுவதோடு மக்களின் உறவுகளை வலுப்படுத்த உதவுகிறது என்பது முற்றிலும் உண்மையாக இருக்கிறது .




 வாழ்க்கையை நேர்மறையாக பார்க்க உதவுகிறது. இந்த நாள் அனைவரையும் மகிழ்ச்சியாக இருக்க ஊக்குவிக்கிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சிரித்து மகிழ்சியாக வாழ்வதற்கு ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டும்.


சிரிப்பு மன அழுத்தத்தை குறைப்பதோடு உடலில் நல்ல ஹார்மோன்களை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.


இன்றைய காலகட்டத்தில் பெரிதும் சர்க்கரை நோய் மற்றும்  இதய நோயால்  பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. வீட்டில் உள்ளவர்களிடமும்,சமுதாயத்தில் உள்ளவர்களிடமும் மனம் விட்டு சிரித்து பேசுபவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை உணர வேண்டும். 


கோவமாக ஒருவர் பேசும் பொழுது நாம் பதிலுக்கு அவரிடம் கோபத்தை காட்டாமல் லேசாக புன்முறுவல் செய்வதால் 

வாழ்க்கையின் சிரமங்களை சமாளிக்க உதவுகிறது. ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் எளிதில் அனைவரிடமும் சிரித்து மகிழ்வாக காணப்படுவோம். சிரிப்பு மனிதனின் வாழ்க்கையை இனிமையாக்குகிறது என்பதை உணர்ந்து சிரித்து மகிழ்வோம். 


காரணம் இன்றி ஒருவரை பார்த்து சிரிப்பதும்,கேலியாகவும், நக்கலாகவும் சிரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  

இந்த நாள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள நினைவூட்டுகிறது. இதனை அறிந்து அனைவரும் கவலை இல்லாமல் சிரித்து வாழ்வோம் .


சிரிப்பு வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் மாற்றுகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பார்த்து கோவம் இல்லாமல் சிரித்த முகத்தோடு வாழ்ந்து காட்டுவோம். கவலைகளையும், நோய்களையும் தூர எறிய தினமும் வாய்விட்டு சிரிப்போம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக சட்டசபை தலைவராக விஜய் தேர்வு.. நாளை மறு நாள் முதல்வராகப் பதவியேற்பு?

news

TVK needs 117: தவெக பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 118 அல்ல.. 117!

news

பெரும்பான்மை பெறாத தவெக.. அடுத்து என்ன நடக்கும்.. ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?

news

TVK Govt: ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆதரவு தரப் போவது யார்.. யாரெல்லாம் ரெடியா இருக்கா?

news

Mango Thokku Tips: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடியில் செமையான.. கிளிமூக்கு மாங்காய் தொக்கு!

news

அடுத்து என்ன செய்யலாம்? தவெக முதல் அதிமுக வரை...தீவிர ஆலோசனையில் கட்சிகள்

news

திமுகவை விட 17.43 லட்சம் வாக்குகளே தவெக கூடுதலாகப் பெற்றுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

4 தொகுதிகளில் NDA.,வின் வெற்றியை பதம் பார்த்த சசிகலாவின் 'அஇபுதமுக'

news

Vijay Vs Udayanidhi Stalin: தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்?

அதிகம் பார்க்கும் செய்திகள்