- க.யாஸ்மின் சிராஜூதீன்
அடிப்படை தேவை கூட
இங்கு முழுமை இல்லையே ....
துன்பத்தில் கொடியது
ஏழ்மையே...
தூக்கம் கூடதொலைந்து
போனதே....
சிறந்த ஆலோசனைகள் கூட
யாரும் ஏற்பதில்லையே ...
பிள்ளைகள் ஆசையெல்லாம் கனவுஆகுமே..
தினமும் உழைத்தால் உண்ணலாம்....
ஒய்வு என்பது இல்லையே...

ஒய்வு எடுத்தால் அடுப்பு உறங்குமே...
பசி நெருப்பு வயிற்றில் எரியுமே...
பணத்திற்கு தட்டுப்பாடு இருக்கலாம்....
நிம்மதி இங்கு குடியிருக்குமே...
குடும்பத்துடன் கொஞ்சி பேசி மகிழலாம்...
அன்பு ஒன்றே பெருஞ்செல்வமாய்
இருக்குமே....
மனது மிகவும் பெரிசுதான்...
கையில் காசு சிறிதுதான்...
ஏழ்மையின் அடிப்படை வரவுதான்....
கல்வி,வேலைவாய்ப்பு...என பாதிப்புதான்....
விடாமுயற்சி அதிகம் இருக்குது...
உழைப்பின் பலனை அடையுது...
பொருளாதாரம் அனைவரும் அடையனும்...
அடிப்படை தேவையை நிறைவு செய்யனும்....
உற்பத்தி தொழில்களைப் பெருக்கனும்....
உழவுத்தொழிலை தழைக்கச் செய்யனும்...
ஏழ்மை அதனைப் போக்கனும்
பகிர்ந்து அளித்துவாழனும்....!!!
உயர்வு தாழ்வு கருதாமல்
ஒற்றுமையோடு வாழனும்...!!!
உலக இன்பம் கானும்...!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்
ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!
Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!
CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்
தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்
{{comments.comment}}