சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாமல் வெளியில் அலைவதை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும், அந்த பகுதிகளில் வெப்ப அலைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தமிழக அரசு சார்பாக குடிநீர் வழங்குதல், ஓஆர்எஸ் கரைசல் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மே ஒன்று, இரண்டு ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீச கூடும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்த நிலையில், இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் இன்று மட்டும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், ஈரோடு,திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஆகிய 19 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும். அப்போது இப்பகுதிகளில் வெப்ப அலை வீச கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் 20 இடங்களில் சதம் அடித்தது. இவ்வாறு அதிக அளவிலான ஊர்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது இதுவே முதல் முறையாகும். மேலும் மே மாதத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}