யூடியூபர் சவுக்கு சங்கரை.. அழைத்துச் சென்ற.. போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது!

May 04, 2024,12:16 PM IST

கோயம்புத்தூர்:  பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இருப்பினும் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை.


போலீஸ் அதிகாரிகளையும், பெண்களையும், சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது.  இதையடுத்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து  கோவை சைபர் கிரைம் போலீசார் இன்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு வாகன மூலம் அழைத்துச் சென்றனர். 




போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த போலீஸார் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு மாற்று வாகனத்தில் மீண்டும் கோவைக்குப் பயணமானார்கள்.


கோவை  கொண்டு செல்லப்பட்ட சவுக்கு சங்கரிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது. அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்