கோயம்புத்தூர்: பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இருப்பினும் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை.
போலீஸ் அதிகாரிகளையும், பெண்களையும், சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் இன்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு வாகன மூலம் அழைத்துச் சென்றனர்.
போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த போலீஸார் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு மாற்று வாகனத்தில் மீண்டும் கோவைக்குப் பயணமானார்கள்.
கோவை கொண்டு செல்லப்பட்ட சவுக்கு சங்கரிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது. அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}