யூடியூபர் சவுக்கு சங்கரை.. அழைத்துச் சென்ற.. போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது!

May 04, 2024,12:16 PM IST

கோயம்புத்தூர்:  பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இருப்பினும் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை.


போலீஸ் அதிகாரிகளையும், பெண்களையும், சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது.  இதையடுத்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து  கோவை சைபர் கிரைம் போலீசார் இன்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு வாகன மூலம் அழைத்துச் சென்றனர். 




போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த போலீஸார் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு மாற்று வாகனத்தில் மீண்டும் கோவைக்குப் பயணமானார்கள்.


கோவை  கொண்டு செல்லப்பட்ட சவுக்கு சங்கரிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது. அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்