ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரப் போவதாக ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசியல் செய்து வருவது போல தெலங்கானாவில் அவரது தங்கை ஷர்மிளா அரசியல் செய்து வருகிறார். ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வரும் ஷர்மிளா, நடக்கப் போகும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் அணி சேர்ந்துள்ளார்.
வருகிற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் காங்கிரஸுக்கு ஆதரவு தரப் போவதாகவும் ஷர்மிளா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

தனது முடிவு குறித்து ஷர்மிளா கூறுகையில், எனது கட்சி வாக்குகள் பிரிவைத் தடுக்கும் வகையில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. வாக்குகள் பிரிந்தால் கே.சந்திரசேகர ராவுக்குத்தான் அது சாதகமாக போகும். எனவேதான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
பிஆர்எஸ் கட்சி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. அது முடிய வேண்டும். அதற்கு காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதை உறுதி செய்யவே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளோம். ஊழல் கறை படிந்த, மக்கள் விரோத பிஆர்எஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த தியாகத்தை நாங்கள் செய்கிறோம் என்றார் ஷர்மிளா.
கடந்த 2021ம் ஆண்டுதான் ஷர்மிளா கட்சி தொடங்கினார். இதுவரை எந்தத் தேர்தலிலும் அவரது கட்சி போட்டியிட்டதில்லை. தனது கட்சி வளர்ச்சிக்காக அவர் 3800 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபயணமும் கூட மேற்கொண்டிருந்தார். மாநிலஅளவில் தீவிர சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்க பாடுபட்டார். ஆனால் தற்போதைய தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருப்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}