ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரப் போவதாக ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசியல் செய்து வருவது போல தெலங்கானாவில் அவரது தங்கை ஷர்மிளா அரசியல் செய்து வருகிறார். ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வரும் ஷர்மிளா, நடக்கப் போகும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் அணி சேர்ந்துள்ளார்.
வருகிற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் காங்கிரஸுக்கு ஆதரவு தரப் போவதாகவும் ஷர்மிளா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

தனது முடிவு குறித்து ஷர்மிளா கூறுகையில், எனது கட்சி வாக்குகள் பிரிவைத் தடுக்கும் வகையில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. வாக்குகள் பிரிந்தால் கே.சந்திரசேகர ராவுக்குத்தான் அது சாதகமாக போகும். எனவேதான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
பிஆர்எஸ் கட்சி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. அது முடிய வேண்டும். அதற்கு காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதை உறுதி செய்யவே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளோம். ஊழல் கறை படிந்த, மக்கள் விரோத பிஆர்எஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த தியாகத்தை நாங்கள் செய்கிறோம் என்றார் ஷர்மிளா.
கடந்த 2021ம் ஆண்டுதான் ஷர்மிளா கட்சி தொடங்கினார். இதுவரை எந்தத் தேர்தலிலும் அவரது கட்சி போட்டியிட்டதில்லை. தனது கட்சி வளர்ச்சிக்காக அவர் 3800 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபயணமும் கூட மேற்கொண்டிருந்தார். மாநிலஅளவில் தீவிர சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்க பாடுபட்டார். ஆனால் தற்போதைய தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருப்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}