சென்னை: தி கோட் படத்தில் நடிகர் விஜய் 2 பாடல்கள் பாடியுள்ளார் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் தி கோட். இப்படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார். அதன் பின்னர் நடிப்பை விடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து இருப்பதால், இப்படம் குறித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் தான் விஜய்யும் வெங்கட் பிரபும் இணைந்துள்ளனர்.

இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். சினேகா, லைலா, பிரேம்ஜி, வைபவ், நிதின் சத்யா, அஜ்மல், பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், யோகிபாபு என முக்கிய நட்சத்திங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் த்ரிஷாவும் கேமியோ கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரித்து உள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறதாம். செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய் 2 வேடத்தில் நடிக்கிறார். இப்படி பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படத்தின் பல்வேறு அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. விசில் போடு என்ற பாடல் கடந்த மாதம் வெளியாகியது. இந்தப் பாட்டை விஜய்யே பாடியிருந்தார். அடுத்து மற்றுமொரு பாடல் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா தெரிவித்துள்ளார். முதலில் வெளிவந்த பாடலை விட இந்த பாடல் சிறப்பானதாக இருக்க வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளதாகவும் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}