சென்னை: தி கோட் படத்தில் நடிகர் விஜய் 2 பாடல்கள் பாடியுள்ளார் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் தி கோட். இப்படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார். அதன் பின்னர் நடிப்பை விடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து இருப்பதால், இப்படம் குறித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் தான் விஜய்யும் வெங்கட் பிரபும் இணைந்துள்ளனர்.
இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். சினேகா, லைலா, பிரேம்ஜி, வைபவ், நிதின் சத்யா, அஜ்மல், பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், யோகிபாபு என முக்கிய நட்சத்திங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் த்ரிஷாவும் கேமியோ கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரித்து உள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறதாம். செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய் 2 வேடத்தில் நடிக்கிறார். இப்படி பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படத்தின் பல்வேறு அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. விசில் போடு என்ற பாடல் கடந்த மாதம் வெளியாகியது. இந்தப் பாட்டை விஜய்யே பாடியிருந்தார். அடுத்து மற்றுமொரு பாடல் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா தெரிவித்துள்ளார். முதலில் வெளிவந்த பாடலை விட இந்த பாடல் சிறப்பானதாக இருக்க வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளதாகவும் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
{{comments.comment}}