
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஓ. பன்னீர் செ்லவம் என்பவர் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் - தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வாழ்த்து.
லோக்சபா தேர்தலில் வாளி, பலா, திராட்சை இவற்றில் ஏதேனும் ஒற்றைச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருக்கிறேன். பாஜக கூட்டணியில் நான் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதற்கு சின்னம் ஒதுக்கக்கோரி விண்ணப்பித்துள்ளேன் என ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடி மகிழ்ந்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் குஷ்பு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை அறிவிப்பு. திருநெல்வேலி லோக்சபா காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிப்பு. மயிலாடுதுறை வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு சீமான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எந்த சின்னத்தை ஒதுக்குவது என்பது தொடர்பாக இன்று மாலை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

வட சென்னையில் யார் முதலில் மனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக, திமுக - அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. திமுக வேட்பாளர் கலாநிதிக்கு 2ம் எண் டோக்கன் வழங்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு 7ம் எண் டோக்கன் வழங்கப்பட்டது. நாங்கள் தான் முதலில் வந்தோம். ஆனால் எப்படி திமுகவுக்கு இரண்டாவது டோக்கன் கொடுக்கப்பட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு மணி நேரம வாதத்திற்குப் பின்னர் அதிமுக வேட்பாளர் மனோ முதலில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தற்போது வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர், அமைச்சரை வெளியே விடாமல் தடுத்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப் போராட்டத்திற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தால் இரு கட்சிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரப்பனின் மகள் வித்யா ராணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி ராமதாஸ் தன் கணவருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் திமுக சார்பில் ஆ. வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரையில் மீண்டும் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!