
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஓ. பன்னீர் செ்லவம் என்பவர் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் - தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வாழ்த்து.
லோக்சபா தேர்தலில் வாளி, பலா, திராட்சை இவற்றில் ஏதேனும் ஒற்றைச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருக்கிறேன். பாஜக கூட்டணியில் நான் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதற்கு சின்னம் ஒதுக்கக்கோரி விண்ணப்பித்துள்ளேன் என ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடி மகிழ்ந்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் குஷ்பு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை அறிவிப்பு. திருநெல்வேலி லோக்சபா காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிப்பு. மயிலாடுதுறை வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு சீமான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எந்த சின்னத்தை ஒதுக்குவது என்பது தொடர்பாக இன்று மாலை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

வட சென்னையில் யார் முதலில் மனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக, திமுக - அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. திமுக வேட்பாளர் கலாநிதிக்கு 2ம் எண் டோக்கன் வழங்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு 7ம் எண் டோக்கன் வழங்கப்பட்டது. நாங்கள் தான் முதலில் வந்தோம். ஆனால் எப்படி திமுகவுக்கு இரண்டாவது டோக்கன் கொடுக்கப்பட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு மணி நேரம வாதத்திற்குப் பின்னர் அதிமுக வேட்பாளர் மனோ முதலில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தற்போது வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர், அமைச்சரை வெளியே விடாமல் தடுத்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப் போராட்டத்திற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தால் இரு கட்சிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரப்பனின் மகள் வித்யா ராணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி ராமதாஸ் தன் கணவருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் திமுக சார்பில் ஆ. வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரையில் மீண்டும் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!