டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கண்ட ஒரு காட்சி பெண் ஒருவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அவரை மட்டுமல்ல, அந்த மேட்டரைப் படிக்கும் எல்லோருக்குமே ஆச்சரியம்தான் வரும்.
நம்ம ஊர் மெட்ரோ ஸ்டேஷன்களில் வழக்கமாக நொறுக்குத் தீனிகளோ அல்லது தண்ணீர் பாட்டில்களோ விற்கும் இயந்திரங்களைப் பார்த்திருப்போம். ஆனால் டெல்லியில் கொஞ்சம் 'அட்வான்ஸாக' யோசித்து ஒரு புதிய மெஷினை வைத்துள்ளனர்.
ரோகிணி கிழக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் இந்த விற்பனை இயந்திரங்களில் விற்கப்படுவது சிப்ஸ் பாக்கெட்டுகள் அல்ல, மாறாக பேக் செய்யப்பட்ட உள்ளாடைகள்!
இதைப் பார்த்த ஒரு பெண், மெட்ரோ ட்ரெயினில் போகும்போது யாருக்குப்பா இது அவசரமா தேவைப்படும்? என கிண்டலாக வீடியோ எடுத்துப் போட, அது இப்போது செம வைரல். ஆரம்பத்தில் பலரும் இதை வேடிக்கையாகப் பார்த்தாலும், போகப் போகத்தான் இதன் உண்மையான பயன் புரிய ஆரம்பித்திருக்கிறது.
திடீரென மழையில் நனைந்துவிட்டால் அல்லது பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் எதிர்பாராத 'கசிவு' ஏற்பட்டால், இந்த மெஷின் எவ்வளவு பெரிய உதவியாக இருக்கும்? எனப் பல நெட்டிசன்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜப்பான் போன்ற நாடுகளில் இது சாதாரணம் என்றாலும், இந்தியாவிற்கு இது ஒரு புதுமையான மாற்றம்தான். என்னதான் சிரிப்பு வந்தாலும், சற்றே சிந்தித்துப் பார்த்தால், இது ஒரு அருமையான ஐடியா என்பதில் சந்தேகமே இல்லை. அவசர காலம் பெண்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அந்த நேரத்திற்கு இது ஒரு 'லைஃப் சேவர்' என்பதில் மாற்றுக் கருத்தில்லை!
நீங்க என்ன நினைக்கறீங்க பிரண்ட்ஸ்.. சொல்லுங்களேன்!
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}