சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. இதனால் சுயேச்சை சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு இந்தப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

திமுக கூட்டணியினருடன்.. ஊர்வலமாக போய் திருவள்ளூர் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மனுத் தாக்கல் செய்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலிருந்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் தற்போது அவருக்கு எதிராக வழக்குத் தொடர்கிறது மத்திய அரசு. மத்திய பாஜக அரசு டெல்லியை அழிக்க முயல்கிறதா என்று கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களில் 33 பேரை மட்டும் விடுதலை செய்த இலங்கை கோர்ட், 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2 பேருக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும், இரண்டாவது முறையாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர். 6 மாத சிறைத் தண்டனைக்குள்ளானவர்களில் ஒருவர் ராமேஸ்வரம், இன்னொருவர் காரைக்காலைச் சேர்ந்தவர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டது. இதன் காரணமாக திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, வேறு ஒரு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!