சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. இதனால் சுயேச்சை சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு இந்தப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

திமுக கூட்டணியினருடன்.. ஊர்வலமாக போய் திருவள்ளூர் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மனுத் தாக்கல் செய்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலிருந்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் தற்போது அவருக்கு எதிராக வழக்குத் தொடர்கிறது மத்திய அரசு. மத்திய பாஜக அரசு டெல்லியை அழிக்க முயல்கிறதா என்று கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களில் 33 பேரை மட்டும் விடுதலை செய்த இலங்கை கோர்ட், 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2 பேருக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும், இரண்டாவது முறையாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர். 6 மாத சிறைத் தண்டனைக்குள்ளானவர்களில் ஒருவர் ராமேஸ்வரம், இன்னொருவர் காரைக்காலைச் சேர்ந்தவர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டது. இதன் காரணமாக திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, வேறு ஒரு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம்!
Idli Podi: இட்லி பொடி.. சுவையான பாரம்பரிய முறையில் எப்படி தயாரிக்கலாம்?
நிழல் மறைந்த நாள்.. தேவகோட்டை மாணவர்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு!
வயதானாலும் நாங்களும் நல்லுள்ளங்களே!
Kalaiarasi Poem: ஆசை !
சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தேறிய பொழில் இலக்கியச் சங்கமம் 2026
ஒரு பக்க கட்டுரை.. முயற்சியின் மந்திரம்!
உலகக் கலை தினம்... World Art Day...!
மதுரை கிழவியை பெருமை செய்ய மண்ணை சுமந்தாய்!