சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. இதனால் சுயேச்சை சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு இந்தப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

திமுக கூட்டணியினருடன்.. ஊர்வலமாக போய் திருவள்ளூர் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மனுத் தாக்கல் செய்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலிருந்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் தற்போது அவருக்கு எதிராக வழக்குத் தொடர்கிறது மத்திய அரசு. மத்திய பாஜக அரசு டெல்லியை அழிக்க முயல்கிறதா என்று கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களில் 33 பேரை மட்டும் விடுதலை செய்த இலங்கை கோர்ட், 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2 பேருக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும், இரண்டாவது முறையாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர். 6 மாத சிறைத் தண்டனைக்குள்ளானவர்களில் ஒருவர் ராமேஸ்வரம், இன்னொருவர் காரைக்காலைச் சேர்ந்தவர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டது. இதன் காரணமாக திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, வேறு ஒரு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்