சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. இதனால் சுயேச்சை சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு இந்தப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

திமுக கூட்டணியினருடன்.. ஊர்வலமாக போய் திருவள்ளூர் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மனுத் தாக்கல் செய்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலிருந்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் தற்போது அவருக்கு எதிராக வழக்குத் தொடர்கிறது மத்திய அரசு. மத்திய பாஜக அரசு டெல்லியை அழிக்க முயல்கிறதா என்று கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களில் 33 பேரை மட்டும் விடுதலை செய்த இலங்கை கோர்ட், 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2 பேருக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும், இரண்டாவது முறையாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.  அவர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர். 6 மாத சிறைத் தண்டனைக்குள்ளானவர்களில் ஒருவர் ராமேஸ்வரம், இன்னொருவர் காரைக்காலைச் சேர்ந்தவர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டது. இதன் காரணமாக திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, வேறு ஒரு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

                                                                    நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
                                                                    பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
                                                                    மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு
                                                                    தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!
                                                                    உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!
                                                                    10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
                                                                    கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
                                                                    கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்
                                                                    மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்