12 மணி நேர வேலை அமைச்சர்கள் செய்கிறார்களா?.. ராஜேஸ்வரி பிரியா அதிரடி கேள்வி

Apr 23, 2023,02:18 PM IST
சென்னை:  12 மணி நேர வேலை திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ளது. முதலில் இதை அமைச்சர்கள் செய்கிறார்களா என்று  அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் மூ. ராஜேஸ்வரி பிரியா கேட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு 12 மணி நேர வேலை திட்டத்தை மசோதாவாக கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. இது பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்த சட்டம் தொழிலாளர்களுக்கு விரோதமானதாகும். எனவே இதை அமல்படுத்தக் கூடாது என்று திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியன் தலைவரான மூ. ராஜேஸ்வரி பிரியா ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில்,  வெளிநாட்டு நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வரவேண்டுமென்றால் நீங்கள் (திமுக)அவர்களிடம் வாங்கும் கமிஷன் சதவீதத்தை குறைத்து கொள்ளுங்கள். அதனை விடுத்து உழைப்பு சுரண்டல் செய்து கொள்ள உடந்தையாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்?

தொழிலாளர்களை 12 மணி நேர வேலை பார்க்க வைத்து இயந்திரமாக மாற்றி இளவயது மரணங்களை அதிகபடுத்துவதனையும், குடும்பத்தினை கவனிக்க முடியாமல் குடும்பங்கள் சீரழிவதையும் கண்டு ரசிப்பதுதான் திமுகவின் திட்டமா? 




மற்றும் பிற மாநிலத்தவருக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் திட்டமாக அமையும் , ஏனென்றால் குடும்பத்துடன் இருப்பவர்களால் 12 மணி்நேரம் வேலை பார்க்க முடியாது. விருப்பமுடையவர்கள் வேலை பார்க்கலாம் என்பதெல்லாம் என்ன ஜாலம். எந்த நிறுவனம் தொழிலாளி விருப்பபடி வேலை கொடுக்கும்?

மக்களை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வேறு வேறு  காரணங்களை காட்டி மக்களை ஏமாற்ற வேண்டாம். 12 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை பார்த்தால்தான் தமழ்நாட்டில் முதலீடு செய்வோம் என்று கூறும் எந்த நிறுவனமும் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை.

மக்களை பலி கிடாவாக்கி விருந்து உண்ண நினைக்கும் உங்கள் சட்ட திருத்தத்தினை திரும்பபெற வேண்டுமென்று அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்