- க. யாஸ்மின் சிராஜூதீன்
கேட்கவே இனிமையாக உள்ளதே "சந்தோஷம் ".......
இதனை நமதாக்கிக் கொண்டால் என்ன...... ???
இதனை வெளியே
தேடுவதேனோ....
கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதனாலோ...... !!!!!!
நம்முள்ளே நம்முடன் இணைந்த
சந்தோஷத்தை மறந்ததேனோ... !!!!!
பிறரைப் பார்த்து அவரின் சந்தோஷத்தை
நமதாக்க ஏங்குவதேனோ......!!!!!

நம் குடிசையே நமக்கு சந்தோஷம் அளிக்கும் போது...
மாளிகையை பார்த்து அந்த சந்தோஷத்திற்கு ஏங்குவதேனோ....!!!!
மனதை வாடச் செய்வதற்காகவோ ......!!!
நம்முடனே இருந்து
நமக்கு சந்தோஷம் அளிக்கும்
சந்தோஷத்தை விரும்பி அனுபவித்திடுவோம்... !!!!
எட்டாத சந்தோஷத்தை நினைத்து ஏங்குவதைவிட...
எட்டிய சந்தோஷத்தை அனுபவிப்பவனே
வாழ்க்கையை ரசித்து வாழ்பவனாவான்.... !!!!
ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்ந்திடுவோம்......
சேமிக்க முடியாத நேரத்தை
இனிய நினைவுகள் சேமித்திடுவோம்....!!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}