காஸியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் 12 வயது சிறுவன் ஒருவன், முதிய தம்பதியை திட்டமிட்டுக் கொன்று, கொள்ளையடித்த செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
12 வயது பையனுக்கு இப்படி ஒரு கிரிமில் புத்தியா என்று பலரும் அதிர்ந்து போயுள்ளனர். காஸியாபாத்தில் நடந்த இந்த சம்பவத்தால் உத்தரப் பிரதேசமே விக்கித்துப் போயுள்ளது.
காஸியாபாத்தில் வசித்து வந்தவர் 60 வயதான இப்ராகிம். இவர் பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவரும், இவரது மனைவி ஹஸ்ராவும் நவம்பர் 22ம் தேதி இவர்களது வீட்டு வளாகத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இருவரும் டாய்லெட்டுக்கு அருகே வீட்டுக்கு வெளியே இவர்களது உடல்கள் கிடந்தன. கழுத்தில் துணியைச் சுற்றி இறுக்கி இருவரையும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு முதலில் சரியான துப்பு கிடைக்கவில்லை. ஆனால் தீவிர விசாரணையில் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்த துணிகர கொலையில் ஈடுபட்டது வெறும் 12 வயதேயான சிறுவன் என்று தெரியவந்து மலைத்துப் போய்விட்டனர். இந்த சிறுவன், கொலை செய்யப்பட்ட தம்பதிக்கு ஏற்கனவே தெரிந்த பையன்தான்.
இப்ராகிடமும் நிறைய பணம், நகை இருப்பதை அறிந்து அந்த சிறுவன் அதை கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளான். இதற்காக தன்னைப் போன்ற சிலரை கூட்டு சேர்த்துக் கொண்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளான். அது வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவர்களைக் கொலை செய்ய அந்த சிறுவன் முடிவு செய்துள்ளான். இதுதொடர்பாக மஞ்ஜேஷ், சிவம் , சந்தீப் ஆகியோரை அணுகியுள்ளான். அவர்களும் ஒப்புக் கொள்ளவே, திட்டமிட்டு கொலைசெய்துள்ளனர். கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்த பணம், மொபைல் போன், நகை ஆகியவற்றைத் திருடியுள்ளனர்.
தற்போது அந்த சிறுவன், மஞ்ஜேஷ், சிவம் ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். சந்தீப் இன்னும் சிக்கவில்லை.
சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}