டெல்லி: நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 48 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக அளவிலான இடங்கள் கிடைத்துள்ளன. 2வது இடத்தை காங்கிரஸும், 3வது இடத்தை திரினமூல் காங்கிரஸும் பெற்றுள்ளன.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலோடு, 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டசபைத் தொகுதிகளுக்கும், 2 லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
48 சட்டசபைத் தொகுதிகளில் அதிகபட்சமா பாஜகவுக்கு 18 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதிகள் கிடைத்துள்ளன. மேற்கு வங்காளத்தில் திரினமூல் காங்கிரஸ் தான் போட்டியிட்ட 6 சட்டசபைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிர வைத்துள்ளது.
14 மாநில சட்டசபை இடைத் தேர்தலில் யார் யாருக்கு எத்தனை சீட் என்ற விவரம் வருமாறு:

அஸ்ஸாம் (5) - பாஜக 2, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி 1, அஸ்ஸாம் கன பரிஷத் 1, காங்கிரஸ் 1
பீகார் (4) - பாஜக 2, ஐக்கிய ஜனதாதளம் 1, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 1
சட்டிஸ்கர் (1)- பாஜக
குஜராத் (1) - பாஜக
கர்நாடகா (3) - காங்கிரஸ்
கேரளா (2) - காங்கிரஸ் 1, சிபிஎம் 1.
மத்தியப் பிரதேசம் (2) - காங்கிரஸ் 1, பாஜக 1
மேகாலயா (1) - தேசிய மக்கள் கட்சி
பஞ்சாப் (4) - ஆம் ஆத்மி 3, காங்கிரஸ் 1
ராஜஸ்தான் (7) - பாஜக 5, காங்கிரஸ் 1, பாரத் ஆதிவாசி கட்சி 1.
சிக்கிம் (2)- சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
உத்தரப் பிரதேசம் (9) - பாஜக 6, ராஷ்டிரிய லோக்தளம் 1, சமாஜ்வாடி கட்சி 2.
உத்தரகண்ட் (1) - பாஜக
மேற்கு வங்காளம் (6) - திரினமூல் காங்கிரஸ்
லோக்சபா இடைத் தேர்தல்:

கேரள மாநிலம் வயநாடு மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா ஒரு தொகுதியில் வென்றுள்ளன.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வென்றுள்ளார். நான்டெட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சாந்துக்ராவ் மரடோரா ஹம்பர்டே வெற்றி பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}