முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு

Jan 20, 2025,07:08 PM IST

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்க எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே இது குறித்து ஆய்வு செய்யத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை நடத்த கேரள அரசு தடையாக இருப்பதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை செய்ய விடாமலும், அணையை பலப்படுத்த  விடாமலும் கேரள அரசு தடையாக இருக்கிறது என்று வாதிட்டனர்.




அதற்கு நீதிபதிகள் இந்தப் பிரச்சனைக்கு இரு மாநில அரசுகளும் சுமூக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், தொடர்ந்து இரு தரப்பு குற்றம் சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது. அணையை மேற்பார்வை செய்வதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கண்காணிப்புக் குழு தொடர வேண்டுமா? அல்லது அணைகள் பாதுகாப்பு சட்டப்படி தற்போது அமைக்கப்பட்டுள்ள குழு தொடர வேண்டுமா என்பது குறித்து இரு மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.


அதன்பின்னர், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்க எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே அது குறித்து ஆய்வு செய்யத் தேவை இல்லை என்று கருத்து தெரிவித்துடன், இந்த வழக்கு குறித்த விரிவான விசாரணையை பிப்ரவரி 3ம் வாரத்திற்கும் ஒத்தி வைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்