டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்க எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே இது குறித்து ஆய்வு செய்யத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை நடத்த கேரள அரசு தடையாக இருப்பதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை செய்ய விடாமலும், அணையை பலப்படுத்த விடாமலும் கேரள அரசு தடையாக இருக்கிறது என்று வாதிட்டனர்.

அதற்கு நீதிபதிகள் இந்தப் பிரச்சனைக்கு இரு மாநில அரசுகளும் சுமூக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், தொடர்ந்து இரு தரப்பு குற்றம் சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது. அணையை மேற்பார்வை செய்வதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கண்காணிப்புக் குழு தொடர வேண்டுமா? அல்லது அணைகள் பாதுகாப்பு சட்டப்படி தற்போது அமைக்கப்பட்டுள்ள குழு தொடர வேண்டுமா என்பது குறித்து இரு மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.
அதன்பின்னர், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்க எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே அது குறித்து ஆய்வு செய்யத் தேவை இல்லை என்று கருத்து தெரிவித்துடன், இந்த வழக்கு குறித்த விரிவான விசாரணையை பிப்ரவரி 3ம் வாரத்திற்கும் ஒத்தி வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீங்கள் நீங்களாக இருங்கள்.. Don't try to be better than anyone!
மீண்டும்.. பள்ளிக்கூடம் போகலாமா.. A Journey Back to the Classroom!
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
அமைதியே மேலோங்கும்.. Peace Reigns Supreme!
கணிதத்தின் தலைமகன்!
தேசிய கணித தினமாச்சே இன்னிக்கு.. உங்களுக்கு ஓர் புதிர்.. விடையைச் சொல்லுங்க பார்ப்போம்!
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டின் அழகு!
{{comments.comment}}