முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு

Jan 20, 2025,07:08 PM IST

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்க எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே இது குறித்து ஆய்வு செய்யத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை நடத்த கேரள அரசு தடையாக இருப்பதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை செய்ய விடாமலும், அணையை பலப்படுத்த  விடாமலும் கேரள அரசு தடையாக இருக்கிறது என்று வாதிட்டனர்.




அதற்கு நீதிபதிகள் இந்தப் பிரச்சனைக்கு இரு மாநில அரசுகளும் சுமூக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், தொடர்ந்து இரு தரப்பு குற்றம் சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது. அணையை மேற்பார்வை செய்வதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கண்காணிப்புக் குழு தொடர வேண்டுமா? அல்லது அணைகள் பாதுகாப்பு சட்டப்படி தற்போது அமைக்கப்பட்டுள்ள குழு தொடர வேண்டுமா என்பது குறித்து இரு மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.


அதன்பின்னர், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்க எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே அது குறித்து ஆய்வு செய்யத் தேவை இல்லை என்று கருத்து தெரிவித்துடன், இந்த வழக்கு குறித்த விரிவான விசாரணையை பிப்ரவரி 3ம் வாரத்திற்கும் ஒத்தி வைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்