துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், துபாயில் வசிக்கும் பொதுமக்களின் மொபைல் போன்களுக்கு, ஏவுகணை தாக்குதல் குறித்த அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மக்கள் திறந்தவெளி இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நடந்தது என்ன?

கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், இன்று (வெள்ளிக்கிழமை) துபாய் குடியிருப்பாளர்களுக்குப் சாத்தியமான ஏவுகணை தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக நான்கு முறை வந்த இந்த எச்சரிக்கை குறுஞ்செய்திகளில், "மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், எந்தவொரு அவசரச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பீதியில் பொதுமக்கள்:
இந்தத் திடீர் எச்சரிக்கையால் துபாயில் வசிக்கும் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அங்குள்ள இந்தியர் ஒருவர் கூறுகையில், "ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வந்த எச்சரிக்கை செய்திகளால் நாங்கள் பயந்துவிட்டோம். அவசரத் தேவைக்காக உணவுப் பொருட்களைச் சேமித்து வைத்துள்ளோம். மேலும், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை ஒரு பையில் தயார் நிலையில் வைத்துள்ளோம்," என்று தெரிவித்தார்.
விமான போக்குவரத்து பாதிப்பு:
மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர்ச் சூழலால் விமான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கியப் போக்குவரத்து மையமாகத் திகழும் துபாய் விமான நிலையத்திலும் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் துபாய் வழியாகப் பயணம் செய்யவிருந்த ஏராளமான இந்தியப் பயணிகள் அங்குத் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், துபாய் அதிகாரிகள் நிலைமையைச் சிறப்பாகக் கையாண்டு வருவதாகப் பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஏஇ (UAE) விளக்கம்:
இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் இணையப் போவதாக வெளியான செய்திகளை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவே தாங்கள் விரும்புவதாகவும், எவ்வித இராணுவக் கூட்டணியிலும் இணையவில்லை என்றும் அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வளைகுடா நாடுகள் முழுவதும் ஒருவித பதற்றமான சூழலே காணப்படுவதால், வெளிநாடுகளில் இருந்து அங்குச் செல்லும் பயணிகள் மற்றும் அங்கு வசிக்கும் மக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனித்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?
திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்
கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்
Agni natchatiram: அக்னி நட்சத்திரம் 2026 .. வெளுக்கெடுக்க ஆரம்பிக்கும் வெயில்.. சம்மர் டிப்ஸ்!
வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!
சாதிக்கத் துடிச்சா.. என்றுமே இளமைதான்.. If you have goals to achieve you are still young !
எங்கெல்லாம் பாராட்டப்படவில்லையோ.. அங்கெல்லாம் you should be unavoidable too!
The 8:10 Rickshaw.. ஒத்திப் போ ஒத்திப் போ.. கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ!
{{comments.comment}}