விஜயவாடா: ஆந்திரமாநிலத்தில் கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீனை சென்னை வியாபாரி ரூ.4 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். இந்த மீனை கிரேனை வைத்துத்தான் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனராம்.
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டின மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்களின் வலையில் அரிய வகை தேக்கு மீன் சிக்கியுள்ளது. இந்த மீன் மிகப் பெரியது. ராட்சத மீன். ஒரு மீனின் எடை 1500 கிலோ வாகும். இந்த மீனை கரைக்கு கொண்டு வர முடியாததால், கிரேனின் உதவியுடன் கடலில் இருந்து அந்த ராட்சச மீனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அந்த மீன் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தின் போது இந்த ராட்சச மீனை பார்ப்பதற்கு கூட்டம் அதிகளவில் கூடியது. சென்னையை சேர்ந்த வியாபாரி ஓவர் அந்த மீனைப்பற்றி தெரிந்ததால், ரூ.4 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். அந்த மீனை லாரியில் ஏற்றி கொண்டு வந்துள்ளார்.
பொதுவாக தேக்கு மீன் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஆயுர்வேத மருத்துகள் தேக்கு மீனில் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. மருத்துவ குணம் காரணமாக இந்த மீனின் விலை எப்போதுமே அதிகமாக இருக்கும்.
இதே பகுதியில்தான் கடந்த 2020ம் ஆண்டு ராட்சத ஸ்டிங்கிரே மீன் சிக்கியது. அது 3 டன் எடை இருந்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}