விஜயவாடா: ஆந்திரமாநிலத்தில் கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீனை சென்னை வியாபாரி ரூ.4 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். இந்த மீனை கிரேனை வைத்துத்தான் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனராம்.
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டின மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்களின் வலையில் அரிய வகை தேக்கு மீன் சிக்கியுள்ளது. இந்த மீன் மிகப் பெரியது. ராட்சத மீன். ஒரு மீனின் எடை 1500 கிலோ வாகும். இந்த மீனை கரைக்கு கொண்டு வர முடியாததால், கிரேனின் உதவியுடன் கடலில் இருந்து அந்த ராட்சச மீனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அந்த மீன் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தின் போது இந்த ராட்சச மீனை பார்ப்பதற்கு கூட்டம் அதிகளவில் கூடியது. சென்னையை சேர்ந்த வியாபாரி ஓவர் அந்த மீனைப்பற்றி தெரிந்ததால், ரூ.4 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். அந்த மீனை லாரியில் ஏற்றி கொண்டு வந்துள்ளார்.
பொதுவாக தேக்கு மீன் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஆயுர்வேத மருத்துகள் தேக்கு மீனில் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. மருத்துவ குணம் காரணமாக இந்த மீனின் விலை எப்போதுமே அதிகமாக இருக்கும்.
இதே பகுதியில்தான் கடந்த 2020ம் ஆண்டு ராட்சத ஸ்டிங்கிரே மீன் சிக்கியது. அது 3 டன் எடை இருந்தது என்பது நினைவிருக்கலாம்.
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்
எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி
அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
பூ அல்ல பாவை.. சிவப்பில் மலரும் மனிதம்!
ஒரு மழை நாளிலிருந்து!
உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை
என் தனிமையின் பேரழகு
{{comments.comment}}