1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீன்.. ஆத்தாடி எத்தாத்தண்டி.. ரு.4 லட்சத்திற்கு ஏலம்!

Jul 29, 2024,04:26 PM IST

விஜயவாடா: ஆந்திரமாநிலத்தில் கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீனை சென்னை வியாபாரி ரூ.4 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். இந்த மீனை கிரேனை வைத்துத்தான் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனராம்.


ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டின மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்களின் வலையில் அரிய வகை தேக்கு மீன் சிக்கியுள்ளது. இந்த மீன் மிகப் பெரியது. ராட்சத மீன். ஒரு மீனின் எடை 1500 கிலோ வாகும். இந்த மீனை கரைக்கு கொண்டு வர முடியாததால், கிரேனின் உதவியுடன் கடலில் இருந்து அந்த ராட்சச மீனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். 




இதனையடுத்து அந்த மீன் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தின் போது இந்த ராட்சச மீனை பார்ப்பதற்கு கூட்டம் அதிகளவில் கூடியது.  சென்னையை சேர்ந்த வியாபாரி ஓவர் அந்த மீனைப்பற்றி தெரிந்ததால், ரூ.4 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். அந்த மீனை லாரியில் ஏற்றி கொண்டு வந்துள்ளார். 


பொதுவாக தேக்கு மீன் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக,  ஆயுர்வேத மருத்துகள் தேக்கு மீனில் அதிகளவில்  தயாரிக்கப்படுகிறது. மருத்துவ குணம் காரணமாக இந்த மீனின் விலை எப்போதுமே அதிகமாக இருக்கும்.


இதே பகுதியில்தான் கடந்த 2020ம் ஆண்டு ராட்சத ஸ்டிங்கிரே மீன் சிக்கியது. அது 3 டன் எடை இருந்தது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்