புதுடில்லி: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்திய அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது.
புதுச்சேரியில் பல ஆண்டுகளாக திமுக-காங்கிரஸ் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இந்த முறை திமுக.,வின் பலம் அதிகரித்துள்ளதால் அவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்றும், கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் தாங்கள் தான் அதிக இடங்களில் போட்டியிடுவோம் என காங்கிரசும் பிடிவாதமாக இருந்து வருகிறது. இதனால் தொகுதி பங்கீட்டில் இதுவரை உடன்பாடு எட்டபடவில்லை. இதற்கிடையில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் திமுக வேட்புமனு தாக்கல் செய்ய அக்கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதனையடுத்து கட்சியினரும் நேற்று வேகமாக சென்று பல தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்தனர்.
டெல்லியில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் :

நேற்று டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) அலுவலகத்தில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களின் முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் புதுச்சேரியில் திமுக உடனான கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசப்பு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் புதுச்சேரியில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளர்களை அடையாளம் காண்பது மற்றும் இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிப்பது குறித்து ராகுல் காந்தி ஆலோசனைகளை வழங்கினார். புதுச்சேரி மக்களின் முக்கிய தேவைகளான மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
விரைவில் வெளியாகும் வேட்பாளர் பட்டியல் :
புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் மிகக் குறைந்த நாட்களே இருப்பதால், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகளை காங்கிரஸ் தலைமை வேகப்படுத்தியுள்ளது. கட்சியின் மாநில நிர்வாகிகள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. "மக்களின் தேவைகளை உணர்ந்து, களத்தில் தீவிரமாகப் பணியாற்றி, ஜனநாயக சக்திகளின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்" என ராகுல் காந்தி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழல் :
புதுச்சேரியில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வலுவான போட்டியை அளிக்கத் தயாராகி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்தத் தீவிர ஆலோசனை, அக்கட்சியின் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களில் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
விஷாலின் விளையாட்டுகள்.. பேர் சொல்லும் பிள்ளை!
ஐம்பூதங்கள்!
புதுச்சேரி கூட்டணி விவகாரம்...டில்லியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை
ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
கத்தார் இயற்கை எரிவாயு நிலையத்தை அதிரடியாகத் தாக்கிய ஈரான்.. அமெரிக்கா அதிர்ச்சி
அதிமுக கூட்டணியில் பாஜக.,விற்கு எத்தனை சீட்? இறுதி செய்ய டில்லி புறப்பட்ட இபிஎஸ்
திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு
நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை
{{comments.comment}}