குடியுரிமையை உதறிய 16 லட்சம் இந்தியர்கள்.. 2022ல் மட்டும் 2.25 லட்சம் பேர்!

Feb 10, 2023,01:29 PM IST
டெல்லி: 2011ம் ஆண்டு முதல் இதுவரை 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை உதறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



இதில் அதிகபட்ச அளவாக 2022ம் ஆண்டு 2.25 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை உதறியுள்ளனர். குறைந்தபட்சமாக 2020ம் ஆண்டு 85,256 பேர் குடியுரிமையை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மேலும் கூறியுள்ளதாவது:

2015ம்ஆம்டு 1 லட்சத்து 31 ஆயிரத்து 489 பேர் குடியுரிமையை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்தனர். 2016ம் ஆண்டு இது 1 லட்சத்து 41 ஆயிரத்து 603 பேராக இருந்தது.  2017ல் குடியுரிமை வேண்டாம் என்று சொன்னவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 49 பேர் ஆவர்.

2018ம் ஆண்டு 1, 34, 561 பேரும், 2019ம் ஆண்டு 1, 44, 017 பேரும், 2021ம் ஆண்டு 1 63, 370 பேரும் குடியுரிமையை விட்டுக் கொடுத்தனர். 2022ம் ஆண்டு குடியுரிமை வேண்டாம் என்று சொன்னவர்கள் 2, 25,620 பேர் ஆவர். கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இதுதான் அதிகபட்ச அளவாகும்.

2011ல் குடியுரிமையை விட்டவர்கள் 1, 22, 819 பேர் ஆவர். இது 2012ல் 1, 20, 923 பேராக இருந்தது. 2013ல் 1,31,405 என்ற அளவில் இருந்தது.  2014ம் ஆண்டு 1,29, 328 பேர் குடியுரிமையை கைவிட்டனர். 2011ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 16 லட்சத்து  63 ஆயிரத்து 440 பேர் இந்தியக் குடியுரிமையை உதறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்