குடியுரிமையை உதறிய 16 லட்சம் இந்தியர்கள்.. 2022ல் மட்டும் 2.25 லட்சம் பேர்!

Feb 10, 2023,01:29 PM IST
டெல்லி: 2011ம் ஆண்டு முதல் இதுவரை 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை உதறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



இதில் அதிகபட்ச அளவாக 2022ம் ஆண்டு 2.25 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை உதறியுள்ளனர். குறைந்தபட்சமாக 2020ம் ஆண்டு 85,256 பேர் குடியுரிமையை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மேலும் கூறியுள்ளதாவது:

2015ம்ஆம்டு 1 லட்சத்து 31 ஆயிரத்து 489 பேர் குடியுரிமையை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்தனர். 2016ம் ஆண்டு இது 1 லட்சத்து 41 ஆயிரத்து 603 பேராக இருந்தது.  2017ல் குடியுரிமை வேண்டாம் என்று சொன்னவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 49 பேர் ஆவர்.

2018ம் ஆண்டு 1, 34, 561 பேரும், 2019ம் ஆண்டு 1, 44, 017 பேரும், 2021ம் ஆண்டு 1 63, 370 பேரும் குடியுரிமையை விட்டுக் கொடுத்தனர். 2022ம் ஆண்டு குடியுரிமை வேண்டாம் என்று சொன்னவர்கள் 2, 25,620 பேர் ஆவர். கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இதுதான் அதிகபட்ச அளவாகும்.

2011ல் குடியுரிமையை விட்டவர்கள் 1, 22, 819 பேர் ஆவர். இது 2012ல் 1, 20, 923 பேராக இருந்தது. 2013ல் 1,31,405 என்ற அளவில் இருந்தது.  2014ம் ஆண்டு 1,29, 328 பேர் குடியுரிமையை கைவிட்டனர். 2011ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 16 லட்சத்து  63 ஆயிரத்து 440 பேர் இந்தியக் குடியுரிமையை உதறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்