குடியுரிமையை உதறிய 16 லட்சம் இந்தியர்கள்.. 2022ல் மட்டும் 2.25 லட்சம் பேர்!

Feb 10, 2023,01:29 PM IST
டெல்லி: 2011ம் ஆண்டு முதல் இதுவரை 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை உதறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



இதில் அதிகபட்ச அளவாக 2022ம் ஆண்டு 2.25 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை உதறியுள்ளனர். குறைந்தபட்சமாக 2020ம் ஆண்டு 85,256 பேர் குடியுரிமையை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மேலும் கூறியுள்ளதாவது:

2015ம்ஆம்டு 1 லட்சத்து 31 ஆயிரத்து 489 பேர் குடியுரிமையை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்தனர். 2016ம் ஆண்டு இது 1 லட்சத்து 41 ஆயிரத்து 603 பேராக இருந்தது.  2017ல் குடியுரிமை வேண்டாம் என்று சொன்னவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 49 பேர் ஆவர்.

2018ம் ஆண்டு 1, 34, 561 பேரும், 2019ம் ஆண்டு 1, 44, 017 பேரும், 2021ம் ஆண்டு 1 63, 370 பேரும் குடியுரிமையை விட்டுக் கொடுத்தனர். 2022ம் ஆண்டு குடியுரிமை வேண்டாம் என்று சொன்னவர்கள் 2, 25,620 பேர் ஆவர். கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இதுதான் அதிகபட்ச அளவாகும்.

2011ல் குடியுரிமையை விட்டவர்கள் 1, 22, 819 பேர் ஆவர். இது 2012ல் 1, 20, 923 பேராக இருந்தது. 2013ல் 1,31,405 என்ற அளவில் இருந்தது.  2014ம் ஆண்டு 1,29, 328 பேர் குடியுரிமையை கைவிட்டனர். 2011ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 16 லட்சத்து  63 ஆயிரத்து 440 பேர் இந்தியக் குடியுரிமையை உதறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்