குடியுரிமையை உதறிய 16 லட்சம் இந்தியர்கள்.. 2022ல் மட்டும் 2.25 லட்சம் பேர்!

Feb 10, 2023,01:29 PM IST
டெல்லி: 2011ம் ஆண்டு முதல் இதுவரை 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை உதறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



இதில் அதிகபட்ச அளவாக 2022ம் ஆண்டு 2.25 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை உதறியுள்ளனர். குறைந்தபட்சமாக 2020ம் ஆண்டு 85,256 பேர் குடியுரிமையை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மேலும் கூறியுள்ளதாவது:

2015ம்ஆம்டு 1 லட்சத்து 31 ஆயிரத்து 489 பேர் குடியுரிமையை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்தனர். 2016ம் ஆண்டு இது 1 லட்சத்து 41 ஆயிரத்து 603 பேராக இருந்தது.  2017ல் குடியுரிமை வேண்டாம் என்று சொன்னவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 49 பேர் ஆவர்.

2018ம் ஆண்டு 1, 34, 561 பேரும், 2019ம் ஆண்டு 1, 44, 017 பேரும், 2021ம் ஆண்டு 1 63, 370 பேரும் குடியுரிமையை விட்டுக் கொடுத்தனர். 2022ம் ஆண்டு குடியுரிமை வேண்டாம் என்று சொன்னவர்கள் 2, 25,620 பேர் ஆவர். கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இதுதான் அதிகபட்ச அளவாகும்.

2011ல் குடியுரிமையை விட்டவர்கள் 1, 22, 819 பேர் ஆவர். இது 2012ல் 1, 20, 923 பேராக இருந்தது. 2013ல் 1,31,405 என்ற அளவில் இருந்தது.  2014ம் ஆண்டு 1,29, 328 பேர் குடியுரிமையை கைவிட்டனர். 2011ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 16 லட்சத்து  63 ஆயிரத்து 440 பேர் இந்தியக் குடியுரிமையை உதறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்