சென்னை: சென்னையில் போலீஸ் கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 கூடுதல் ஆணையர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்து வந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் ஏ. அருண் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள், அவர்களது பாஷையில் அவர்களுடன் பேசப்படும் என்று புதிய ஆணையர் அருண் அதிரடியாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மேலும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக சென்னையின் 2 கூடுதல் ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையின் 3 உயர் காவல்துறை அதிகாரிகளும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நடந்துள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விவரம்:

தாம்பரம் காவல்துறை ஆணையர் ஏ அமல்ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் காவல்துறை ஆணையராக கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் டிஜிபி ஹெச் எம் ஜெயராம் மாநில குற்றப்பதிவேட்டு பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி வினித் தேவ் வாங்கடே சென்னை தலைமையிடத்து ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி ஐ ஜி டி எஸ் அன்பு விடம் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் க்ரைம் பிரிவு ஏடிஜிபி சஞ்சய் குமார் கடலோரப் பாதுகாப்பு பிரிவின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சந்திப் மிடல் சென்னை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிபி ராஜீவ்குமார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரிவின் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி தமிழ் சந்திரன் தொழில்நுட்ப பிரிவுக்கான ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்
சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜி என் கண்ணன் சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக இருந்த அஸ்ரா கார்க் வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சேலம்- திருப்பூர் கமிஷனர்களும் மாற்றம்
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபூ சேலம் மாநகர காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் துறை ஆணையர் விஜயலட்சுமி ஆயுதப்படை ஐஜியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை ஆயுதப்படை ஐஜி லட்சுமி, திருப்பூர் மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}