சென்னை: சென்னையில் போலீஸ் கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 கூடுதல் ஆணையர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்து வந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் ஏ. அருண் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள், அவர்களது பாஷையில் அவர்களுடன் பேசப்படும் என்று புதிய ஆணையர் அருண் அதிரடியாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மேலும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக சென்னையின் 2 கூடுதல் ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையின் 3 உயர் காவல்துறை அதிகாரிகளும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நடந்துள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விவரம்:

தாம்பரம் காவல்துறை ஆணையர் ஏ அமல்ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் காவல்துறை ஆணையராக கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் டிஜிபி ஹெச் எம் ஜெயராம் மாநில குற்றப்பதிவேட்டு பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி வினித் தேவ் வாங்கடே சென்னை தலைமையிடத்து ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி ஐ ஜி டி எஸ் அன்பு விடம் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் க்ரைம் பிரிவு ஏடிஜிபி சஞ்சய் குமார் கடலோரப் பாதுகாப்பு பிரிவின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சந்திப் மிடல் சென்னை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிபி ராஜீவ்குமார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரிவின் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி தமிழ் சந்திரன் தொழில்நுட்ப பிரிவுக்கான ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்
சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜி என் கண்ணன் சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக இருந்த அஸ்ரா கார்க் வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சேலம்- திருப்பூர் கமிஷனர்களும் மாற்றம்
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபூ சேலம் மாநகர காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் துறை ஆணையர் விஜயலட்சுமி ஆயுதப்படை ஐஜியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை ஆயுதப்படை ஐஜி லட்சுமி, திருப்பூர் மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
May 1: உலக உழைப்பாளர் தினம்.. முயற்சியே வெல்லும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
May Day: தொழிலாளர் தினம்.. உழைப்பில்லாமல் கிடைப்பது நிலைத்திருப்பது இல்லை!
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
{{comments.comment}}