சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போராட்டம் நடத்தியுள்ள நிலையில், அதற்கு தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழ்நாட்டில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் இதுகுறித்தும், திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தும் திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

எங்கள் தேர்தல் அறிக்கை குழு மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. தமிழகத்தை அடுத்த 50 ஆண்டுகால வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலான பல புதுமையான திட்டங்களை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் போர் தமிழகத்திற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையிலானது. இன்னும் வெளிப்படையாகச் சொல்லப்போனால், இது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான சித்தாந்தப் போர்.
தி.மு.க அரசு பதவியேற்ற முதல் நாளிலிருந்தே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், குற்றப் பதிவுகளை பார்த்தால், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும். உண்மையில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் மிக மோசமான குற்றங்கள் 1,500 முதல் 1,800 வரை பதிவாகின. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. தமிழகம் பாதுகாப்பான மாநிலமாகவும், சென்னை மிகவும் பாதுகாப்பான நகரமாகவும் திகழ்கிறது.
தமிழகக் காவல்துறை மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றார் அவர்.
கொளத்தூரில் காட்டிய வீரியத்தப் பார்த்துமா இப்படிப் பேசுகிறீர்கள்.. திமுகவுக்கு முதல்வர் விஜய் பதிலடி
திமுகவுக்குப் பதிலடியாக.. கருணாநிதியின் ஆயுதத்தைக் கையில் எடுத்த முதல்வர் விஜய்!
ரீல்ஸ் ஆட்சி நடத்தாம ரியல் ஆட்சி நடத்துங்க... சட்டசபையில் அதிரடி காட்டிய உதயநிதி
பிள்ளை மீது சத்தியம் பண்ண தயாரா?.. இபிஎஸ்.,க்கு ஆவேசமாக சவால் விட்ட சி.வி.சண்முகம்
திமுக.,வுடன் 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அடித்துச் சொன்ன இபிஎஸ்
இரண்டாகப் பிரிந்து ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்.. அடுத்து என்ன நடக்கும்?
ரதன் பண்டிட் நியமனம் .. கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ரத்து செய்த முதல்வர் விஜய்!
பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் தப்பித்த மைனாரிட்டி திமுக அரசு.. டாக்டர் ராமதாஸ் அன்று எழுதியது!
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க - மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}