ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான போர்.. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை

Mar 17, 2026,10:50 AM IST

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போராட்டம் நடத்தியுள்ள நிலையில், அதற்கு தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கடும் பதிலடி கொடுத்துள்ளார்.


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழ்நாட்டில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் இதுகுறித்தும், திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தும் திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கருத்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறியதாவது:




எங்கள் தேர்தல் அறிக்கை குழு மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. தமிழகத்தை அடுத்த 50 ஆண்டுகால வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலான பல புதுமையான திட்டங்களை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 


இந்தப் போர் தமிழகத்திற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையிலானது. இன்னும் வெளிப்படையாகச் சொல்லப்போனால், இது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான சித்தாந்தப் போர்.


தி.மு.க அரசு பதவியேற்ற முதல் நாளிலிருந்தே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், குற்றப் பதிவுகளை பார்த்தால், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும். உண்மையில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


அ.தி.மு.க ஆட்சியில் மிக மோசமான குற்றங்கள் 1,500 முதல் 1,800 வரை பதிவாகின. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. தமிழகம் பாதுகாப்பான மாநிலமாகவும், சென்னை மிகவும் பாதுகாப்பான நகரமாகவும் திகழ்கிறது.


தமிழகக் காவல்துறை மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றார் அவர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

news

இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

news

தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

கரூர் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

news

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான போர்.. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை

news

இஸ்ரேல் - அமெரிக்காவுக்கு பயங்கரமான பதிலடி காத்திருக்கு.. ஈரான் மீண்டும் எச்சரிக்கை

news

உனக்காக நான் பிறந்திருந்தால்..! (அவளின் அவன் (6)

news

ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் பயங்கரத் தாக்குதல்.. 400 பேருக்கும் மேல் உயிரிழப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்