அரக்கோணம்: வீட்டில் தனியாக இருந்த போது தொடர்ந்து வீடியோ கேம் விளையாடி வந்த 18 வயது மாணவருக்கு திடீரென்று மனநலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.
அரக்கோணம் அடுத்துள்ள காலிவாரி பகுதியை சேர்நதவர் தீபன். இவரது தந்தை சமீபத்தில் தான் இறந்துள்ளார். 18 வயதாகும் தீபன், எப்போது பார்த்தாலும் வீடியோ கேம் ஆடி வருவாராம். வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடியுள்ளார். இரவு பகல் பாராமல் தொடந்து வீடியோ கேம் விளையாடியதால் திடீர் என்று மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது.
விடாமல் தொடர்ந்து வீடியோ கேம் ஆடியதால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவரது மன நலமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மகனின் உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் கண்டு பயந்து போன அவரது தாயார் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சென்னைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவரது கை கால்களைக் கட்டி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மன நல மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அங்கு தீபனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீடியோ கேம் ஆடி இப்படி மன நலம் பாதிக்கப்பட்ட மாணவரின் நிலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அப்படி இருக்கையில் வீடியோ கேம் போன்ற அபாயங்களை குறைந்த அளவில் பயன்படுத்தினாலே ஆபத்து வரும் என்ற நிலையில், இப்படி இடைவிடாமல் விளையாடும் அளவுக்கு அந்தப் பையனுக்கு ஏன் பெற்றோர்கள் தனிமையைக் கொடுத்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் தற்பொழுது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது என்பது வேதனை அளிப்பதாகவே உள்ளது. குழந்தைகள், சிறுவர்களிடையேதான் இப்பாதிப்பு தற்பொழுது அதிகமாக உள்ளது. இச்சம்பவங்களினால் இளம் வயதுடையவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி வருகிறது. செல்பான்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஒழிய இவற்றில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}