"வீடியோ கேம்".. 18 வயசு சிறுவனுக்கு நடந்த சோகம்.. உஷார் மக்களே!

Oct 04, 2023,01:01 PM IST

அரக்கோணம்: வீட்டில் தனியாக இருந்த போது தொடர்ந்து வீடியோ கேம் விளையாடி வந்த 18 வயது மாணவருக்கு திடீரென்று மனநலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.


அரக்கோணம் அடுத்துள்ள காலிவாரி பகுதியை சேர்நதவர் தீபன். இவரது தந்தை சமீபத்தில் தான் இறந்துள்ளார். 18 வயதாகும் தீபன், எப்போது பார்த்தாலும் வீடியோ கேம் ஆடி வருவாராம். வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடியுள்ளார். இரவு பகல் பாராமல் தொடந்து வீடியோ கேம் விளையாடியதால் திடீர் என்று மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. 




விடாமல் தொடர்ந்து வீடியோ கேம் ஆடியதால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவரது மன நலமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மகனின் உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் கண்டு பயந்து போன அவரது தாயார் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சென்னைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


இதைத் தொடர்ந்து அவரது கை கால்களைக் கட்டி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மன நல மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அங்கு தீபனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீடியோ கேம் ஆடி இப்படி மன நலம் பாதிக்கப்பட்ட மாணவரின் நிலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அப்படி இருக்கையில் வீடியோ கேம் போன்ற அபாயங்களை குறைந்த அளவில் பயன்படுத்தினாலே ஆபத்து வரும் என்ற நிலையில், இப்படி இடைவிடாமல் விளையாடும் அளவுக்கு அந்தப் பையனுக்கு ஏன் பெற்றோர்கள் தனிமையைக் கொடுத்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. 


இதுபோன்ற சம்பவங்கள் தற்பொழுது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது என்பது வேதனை அளிப்பதாகவே உள்ளது. குழந்தைகள், சிறுவர்களிடையேதான் இப்பாதிப்பு தற்பொழுது அதிகமாக உள்ளது. இச்சம்பவங்களினால் இளம் வயதுடையவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி வருகிறது. செல்பான்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஒழிய இவற்றில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.

சமீபத்திய செய்திகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

அதிகம் பார்க்கும் செய்திகள்