காஸியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் 19 வயதேயான கல்லூரி மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம் ஒன்றில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அந்த மாணவனுக்கு மாரடைப்பு வந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வளவு சின்ன வயதில் மாரடைப்பு வரும் அளவுக்கு அவருக்கு உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது. பிறகு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை.

அந்த மாணவரின் பெயர் சித்தார் குமார் சிங். கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சரஸ்வதி விஹார் பகுதியில் உள்ள ஜிம்முக்கு இவர் உடற்பயிற்சி செய்யச் செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் அந்த மாணவன் உடற்பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது டிரெட்மில்லில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு கடுமையான நெஞ்சு வலி வந்துள்ளது. அப்படியே சிறிது நேரம் சமாளிக்கப் போராடியவர் பின்னர் அது முடியாமல் அப்படியே மயங்கிச் சரிந்தார்.
உடனடியாக அருகில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து அவரை எழுப்ப முயற்சித்தனர். பிறகு அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சித்தார்த் குமார் சிங்கைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து விட்டதாக தெரிவித்தனர்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}