1% பெரும் பணக்கார இந்தியர்களின் பிடியில் ... 40% நாடு... அதிர வைக்கும் டேட்டா!

Jan 16, 2023,12:17 PM IST
மும்பை:  இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களின் எண்ணிக்கை வெறும் 1 சதவீதம்தான். ஆனால் இவர்கள் வசம்தான் நாட்டின் வளத்தின் 40 சதவீதம் இருப்பதாக ஒரு புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது.



இந்தப் பட்டியலில் கடைசி  இடங்களில் இருக்கும் 50 சதவீதம் பேரிடம் வெறும் 3 சதவீத வளம்தான் இருக்கிறது என்ற வேதனைத் தகவலும் இதில் அடங்கியுள்ளது.

டாவோஸில் நடந்த உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்தான் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையைத் தாக்கல் செய்த  ஆக்ஸ்பாம்  சர்வதேச அமைப்பு கூறுகையில், இந்தியாவின் டாப் 10 இடங்களில் உள்ள பணக்காரர்களுக்கு தலா 5 சதவீத கூடுதல் வரி விகித்தால், அந்தப்  பணத்தை வைத்து நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் பள்ளிச் செலவை சரி செய்ய முடியும்.

இந்திய கோடீஸ்வரர்களுக்கு ஒரே ஒரு முறை, அவர்களது  மொத்த சொத்துக்கும் 2 சதவீத வரி விகித்தால் ரூ. 40,423 கோடி கிடைக்கும். அதை வைத்து 3 ஆண்டுகளுக்கு நாட்டில் உள்ள ஊட்டச்சத்த்து குறைபாடு உடையவர்களுக்கு நல்ல உணவு வழங்க முடியும்.

நாட்டின் டாப் 10 கோடீஸ்வரர்களுக்கு 5 சதவீத வரி விகித்தால் 1.37 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். இது,  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ஆயுஷ் அமைச்சகம் ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டை விட ஒன்றரை மடங்கு அதிகமாகும்.

இந்தியாவில் பெண் ஊழியர்களை விட ஆண் ஊழியர்களுக்கே அதிக சம்பளம் தரப்படுகிறது. ஆண்கள் ஒரு ரூபாய் சம்பாதித்தார், அது பெண்களுக்கு 63 பைசாவாக மட்டுமே உள்ளது. இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மற்றும் ஊரகப் பகுதிகளில் இன்னும் குறைவு. அந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் வெறும் 55 பைசா மட்டுமே சம்பாதிக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்