சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கனமழை மற்றும் மிக கனமழை காரணமாக ஆரஞ்சு, மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தென்னிந்திய பகுதியின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதியை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுதினம் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
என்றும் இளமையுடன்...:!
எது எப்படி இருப்பினும்.. நீ வேண்டும்.. I really need you!
மாபெரும் சொத்து.. கல்வி.. Education – The Greatest Wealth
{{comments.comment}}