சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கனமழை மற்றும் மிக கனமழை காரணமாக ஆரஞ்சு, மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தென்னிந்திய பகுதியின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதியை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுதினம் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெகா ஸ்டார் மோகன்லாலின் ரூ. 421 கோடி சாம்ராஜ்ஜியம்.. என்னெல்லாம் இருக்கு பாருங்க!
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!
உடம்பு சரியில்லையா.. பேசாம சத்து மாவு கஞ்சி சாப்பிடுங்க.. செய்வதும் சுலபம்.. ஹெல்த்தியும் கூட!
சென்னை கூடுவாஞ்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் அதிரடி கைது
பனையூரில் தவெக தலைவர் விஜய் காரை மறித்த பெண் நிர்வாகியால் பரபரப்பு
சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை
மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!
அடிக்குது குளிரு.. ராத்திரி 10 மணிக்கு மேல இவர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்!
{{comments.comment}}