நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. வன்முறை தலைவிரித்தாடும் மணிப்பூரில் மட்டும் ரத்து!

May 07, 2023,11:47 AM IST
டெல்லி: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ளது. வன்முறை மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வை நடத்துகிறது. இளங்கலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதி நுழைவுத் தேர்வு இது.  இந்தத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது.

தேர்வு நடைபெறும் மையங்களுக்கு பிற்பகல் 1.30க்குள் சென்று விட வேண்டும். அதன் பிறகு வந்தால் கண்டிப்பாக மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 லட்சம் மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.




தமிழ்நாட்டில் இந்த முறை 1.47 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5000 பேர் அதிகமாகும். தமிழ்நாட்டில்தான் நாட்டிலேயே அதிக அளவாக 11,575 மருத்துவ இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வை தமிழ், ஆங்கிலம் உள்பட மொத்தம் 13 மொழிகளில் எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆடைக்கட்டுப்பாடும் இதில் முக்கியமானது. 

மணிப்பூரில் மட்டும்  ரத்து

பாஜக ஆட்சி நடந்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப் பெரிய கலவரம் வெடித்துள்ளது. அங்கு கலவரமும், வன்முறையும் தலைவிரித்தாடுவதால் அந்த மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  அங்கு நிலைமை சகஜமானதும் தேர்வு நடத்தப்படும் என்று தெரிகிறது.




சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்