டெல்லி: இந்தியாவின் சார்பில் 96வது ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க அனுப்பப்பட்ட மலையாளப் படம் 2018: Everyone is a Hero இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது.
மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய படம்தான் 2018: Everyone is a Hero. இந்தப் படம் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக அனுப்பி வைக்கப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது இந்தப் படம் கடைசி 15 படங்களின் பட்டியலில் இடம் பிடிக்கத் தவறியுள்ளது. இதனால் சிறந்த படத்துக்கான போட்டியிலிருந்து இந்தியா விலக்கப்பட்டுள்ளது.
டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்த படம்தான் 2018. கடந்த செப்டம்பர் மாதம் இந்தப் படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. 2018ம் ஆண்டு கேரளாவை உலுக்கிய வெள்ளத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பும், வசூலும் கிடைத்தது ரூ. 200 கோடியை வசூலித்து மலையாளத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. மலையாளத் திரையுலகில் அதிக அளவில் வசூலித்த படமாகவும் இது உயர்ந்தது.
கடந்த ஆஸ்கர் விருதுகள் விழாவில் அதாவது 95வது ஆஸ்கர் விழாவில் இந்தியாவில் தயாரித்து வெளியிடப்பட்ட ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிபன்ட் விஸ்பர்ஸ் படங்கள் நேரடியாக தயாரிப்பாளர்களால் விருதுக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவின் சார்பில் செல்லோ ஷோ என்ற குஜராத்தி மொழிப் படம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிபன்ட் விஸ்பர்ஸ் படங்களுக்கு விருது கிடைத்தது. செல்லோ ஷோவுக்கு விருது எதுவும் கிடைக்கவில்லை என்பது நினைவிருக்கலாம்.
ஆஸ்கர் விருதுகளில் இறுதி 5 படங்களில் கடைசியாக 2001ம் ஆண்டுதான் இந்தியப் படம் இடம் பெற்றது. அது ஆமிர்கான் நடித்த லகான். அப்படம் விருது வெல்லத் தவறியது என்பது நினைவிருக்கலாம்.
96வது ஆஸ்கர் விருதுகள் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10ம் தேதி லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நடைபெறும்.
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}