பாட்னாவில் 15 கட்சிதான்.. இப்போது 26.. பெங்களூரை கலக்கப் போகும் எதிர்க்கட்சிகள் சந்திப்பு!

Jul 17, 2023,10:25 AM IST
பெங்களூரு: பெங்களூரில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக்  கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிற லோக்சபா தேர்தலை எப்படி சந்திப்பது, பாஜகவை எப்படி வீழ்த்துவது என்ற முஸ்தீபுகளில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன. தேர்தலை சந்திப்பதற்கு முன்பு எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை அவை தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் தலைமையில் செயல்பட சில கட்சிகளுக்கு தயக்கம் உள்ளது. அதேசமயம் தனியாக செயல்படவும் அவர்களுக்குத் தைரியம் இல்லை. இந்த நிலையில்தான் எங்களது தலைமை முக்கியம் இல்லை. அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதே முக்கியம் என்று காங்கிரஸ் பெருந்தன்மையுடன் கூறி விட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 23ம் தேதி பாட்னாவில் முதல் எதி��்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், மேற்கு  வங்காள முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தற்போது 2வது கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில்  26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை எதிர்ப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இதனால் ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸுக்கும்இடையே நிலவி வந்த பூசல் ஓயும் என்று தெரிகிறது.

பாட்னா கூட்டம் முடிந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் உடைந்தது. சரத் பவாரின் தம்பி அஜீத் பவார், மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி வைத்து அங்கு போய் விட்டனர்.  அஜீத் பவார் துணை முதல்வராகி விட்டார். இதனால் இன்றைய கூட்டத்துக்குப் பின்னர் என்ன மாதிரியான பின் விளைவுகள் ஏற்படும் என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் செந்தில் பாலாஜி ரூபத்தில் திமுகவுக்கும் ஏகப்பட்ட அழுத்தங்கள் தரப்படுகின்றன. ஒவ்வொரு எதிர்க்கட்சியும் ஒவ்வொரு விதமான சிக்கலை சந்தித்துக்கொண்டுதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்