- கலைவாணி கோபால்,
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சாலையோரம் நின்றிருந்த கார் மீது வேகமாக வந்த கார் மோதியதில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த 5 ஐய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிறுத்தப்பட்டிருந்த காரில் தெலங்கானாவைச் சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து வந்து கொண்டிருந்தனர். வேகமாக வந்த கார் கீழக்கரையைச் சேர்ந்தது. 4 ஐய்யப்ப பக்தர்களும், கீழக்கரை காரில் இருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அங்குள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விடியற்காலையில் கீழக்கரை கார் வந்தபோது, டிரைவர் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்
எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி
எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்
ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறை ஊழியர்கள் தபால் ஓட்டு போடலாம்
கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
புதுச்சேரி கூட்டணி விவகாரம்...டில்லியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை
ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
{{comments.comment}}