கீழக்கரை அருகே விபரீதம்.. சாலையோரம் நின்றிருந்த கார் மீது இன்னொரு கார் மோதி விபத்து!

Dec 06, 2025,11:37 AM IST

- கலைவாணி கோபால்,


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சாலையோரம் நின்றிருந்த கார் மீது வேகமாக வந்த கார் மோதியதில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த 5 ஐய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


நிறுத்தப்பட்டிருந்த காரில் தெலங்கானாவைச் சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து வந்து கொண்டிருந்தனர். வேகமாக வந்த கார் கீழக்கரையைச் சேர்ந்தது. 4 ஐய்யப்ப பக்தர்களும், கீழக்கரை காரில் இருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அங்குள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 




விடியற்காலையில் கீழக்கரை கார் வந்தபோது, டிரைவர் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து அந்தப் பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

கடந்த 2 நாட்களாக சரிவில் இருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு... அதுவும் எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

Year in Search 2025.. அதிகம் தேடப்பட்ட சமையல் குறிப்புகள்.. ஆஹா அது இருக்கா.. சூப்பரப்பு!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருமுருகாற்றுப் படை.!!!

news

கீழக்கரை அருகே விபரீதம்.. சாலையோரம் நின்றிருந்த கார் மீது இன்னொரு கார் மோதி விபத்து!

news

அமுதமாய் மனம் நிறைந்த கோபாலனே.. பார்த்தனின் பார்த்தசாரதியே.. புருஷோத்தமனே!

news

அமாவாசை அன்று அவள் என் செய்வாள்?

news

அதலக்காய் பாத்திருக்கீங்களா?.. இப்ப சீசன்.. விட்ராதீங்க.. வாங்கி சாப்பிடுங்க.. சூப்பர் ஹெல்த்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்