ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்

Feb 02, 2026,05:52 PM IST

சென்னை: ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் வெட்டப்பட்டுள்ளதாக வதந்தி கிளப்புகிறார்கள். இது ஆச்சரியத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. ஏன் இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என்று பிரபல தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.


ஜனநாயகன் படம் தொடர்பான சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லை. தினசரி ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதுவும் ஏதாவது ஒரு தகவல் பரப்பபப்ட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இதில் பாதிக்கும் மேல் பொய்யானதாக இருப்பதுதான் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் 20 நிமிடங்களுக்கு காட்சிகள் வெட்டப்பட்டு சென்சார் வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




ஜனநாயகன் திரைப்படத்தின் 20 நிமிட காட்சிகள் எடிட் செய்யப்பட்டு தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன - எப்படித்தான் இதுபோன்ற கதைகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்களோ? தயாரிப்பாளர் இன்னும் தணிக்கை குறித்த தனது திட்டங்களையே இறுதி செய்யவில்லை, அப்படியிருக்கையில் ஏன் அனைவரும் இதுபோன்ற பொய் செய்திகளைப் பரப்புகிறார்கள்? இதன் பின்னணியில் என்ன நோக்கம் இருக்கிறது? படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கெடுப்பதற்காகவா? தயவுசெய்து இதை நிறுத்துங்கள்.


செய்திகளைப் பகிர்வதற்கு முன் தயாரிப்பாளரிடமிருந்து வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருப்போம். தணிக்கை செயல்முறை இன்னும் நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. அதன் பிறகுதான், பிப்ரவரி மாத ரிலீஸ் திட்டங்கள் குறித்து நமக்குத் தெரியவரும்.


இருப்பினும், ஜனநாயகன் படத்தின் வெளியீட்டுத் தேதியை வைத்தே பல புதிய திரைப்படங்கள் தங்களது பிப்ரவரி மாத ரிலீஸ் தேதியை முடிவு செய்யக் காத்திருக்கின்றன. மற்ற திரைப்படங்கள் பிப்ரவரியில் வெளியாவதா அல்லது மார்ச் 2026-க்கு ஒத்திவைப்பதா என்பதைத் தீர்மானிக்க, முறையான அறிவிப்பு விரைவில் வரும் என நம்புவோம் என்று அவர் கூறியுள்ளார்.


ஜனநாயகன் படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவின்படி, தனி நீதிபதி மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த வழக்கு  எப்போது விசாரணைக்கு வரும் என்று தெரியவில்லை. காரணம், தயாரிப்பாளர் தரப்பில் தனி நீதிபதியிடம் இன்னும் மனு தாக்கல் செய்யவே இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் சென்சாரிடம் மீண்டும் போகப் போகிறார்களா அல்லது உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போகிறார்களா அல்லது தனி நீதிபதியிடமே செல்லப் போகிறார்களா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை இல்லை என்பதால் ஜனநாயகன் விவகாரம் அப்படியேதான் நீடிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!

news

சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!

news

நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

news

10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்