சென்னை: ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் வெட்டப்பட்டுள்ளதாக வதந்தி கிளப்புகிறார்கள். இது ஆச்சரியத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. ஏன் இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என்று பிரபல தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படம் தொடர்பான சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லை. தினசரி ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதுவும் ஏதாவது ஒரு தகவல் பரப்பபப்ட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இதில் பாதிக்கும் மேல் பொய்யானதாக இருப்பதுதான் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 20 நிமிடங்களுக்கு காட்சிகள் வெட்டப்பட்டு சென்சார் வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஜனநாயகன் திரைப்படத்தின் 20 நிமிட காட்சிகள் எடிட் செய்யப்பட்டு தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன - எப்படித்தான் இதுபோன்ற கதைகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்களோ? தயாரிப்பாளர் இன்னும் தணிக்கை குறித்த தனது திட்டங்களையே இறுதி செய்யவில்லை, அப்படியிருக்கையில் ஏன் அனைவரும் இதுபோன்ற பொய் செய்திகளைப் பரப்புகிறார்கள்? இதன் பின்னணியில் என்ன நோக்கம் இருக்கிறது? படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கெடுப்பதற்காகவா? தயவுசெய்து இதை நிறுத்துங்கள்.
செய்திகளைப் பகிர்வதற்கு முன் தயாரிப்பாளரிடமிருந்து வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருப்போம். தணிக்கை செயல்முறை இன்னும் நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. அதன் பிறகுதான், பிப்ரவரி மாத ரிலீஸ் திட்டங்கள் குறித்து நமக்குத் தெரியவரும்.
இருப்பினும், ஜனநாயகன் படத்தின் வெளியீட்டுத் தேதியை வைத்தே பல புதிய திரைப்படங்கள் தங்களது பிப்ரவரி மாத ரிலீஸ் தேதியை முடிவு செய்யக் காத்திருக்கின்றன. மற்ற திரைப்படங்கள் பிப்ரவரியில் வெளியாவதா அல்லது மார்ச் 2026-க்கு ஒத்திவைப்பதா என்பதைத் தீர்மானிக்க, முறையான அறிவிப்பு விரைவில் வரும் என நம்புவோம் என்று அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகன் படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவின்படி, தனி நீதிபதி மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்று தெரியவில்லை. காரணம், தயாரிப்பாளர் தரப்பில் தனி நீதிபதியிடம் இன்னும் மனு தாக்கல் செய்யவே இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் சென்சாரிடம் மீண்டும் போகப் போகிறார்களா அல்லது உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போகிறார்களா அல்லது தனி நீதிபதியிடமே செல்லப் போகிறார்களா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை இல்லை என்பதால் ஜனநாயகன் விவகாரம் அப்படியேதான் நீடிக்கிறது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}