சென்னை: எனது 50 ஆண்டு கால திரையுலக பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி என
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும்
கூலி படம் இன்று (ஆகஸ்ட்14) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் நேற்று வெளியான ஓரே நாளில் உலக அளவில் ரூ.151 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூலை கூலி திரைப்படம் முறியடித்துள்ளது.
இந்நிலையில், திரையுல வாழ்வில் நடிகர் ரஜினிகாந்த 50 ஆண்டுகாலம் நிறைவு செய்துள்ளார். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன் லால் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள பதிவில்,
அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும்,
கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
{{comments.comment}}