- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
அன்றைய நாள் பயிற்சிப் புத்தகத்தில் மாணவர்கள் எழுதும் செயல்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்து...
ஒட்டகச்சிவிங்கி படம் பயிற்சிப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும்.ஒட்டகச்சிவிங்கியைப் பற்றி இரண்டு மூன்று வரிகள் மாணவர்கள் சொந்தமாக எழுத வேண்டும்..
அனைவரும் எழுத ஆரம்பித்தார்கள்... பெரும்பாலான மாணவர்கள் ஒட்டகச்சிவிங்கி ஒரு விலங்கு.அதற்கு நீளமான கழுத்து உண்டு ... என்றவாறே எழுதிக் கொண்டிருந்தார்கள்...
தர்ஷன் மட்டும் மறைத்து மறைத்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே எழுதினான்...
முதல் ஆளாக என்னிடம் எழுதியதைக் காட்டும் தர்ஷன்...ஆறேழு பேர் வந்த பிறகும்,வரவே இல்லை...
பொறுமை இழந்து நானே...தர்ஷன், அப்படி என்ன தான் எழுதுறனு கேட்டேன்...
அதற்கு தர்ஷன் தரமா எழுதுறேன் மிஸ்...வெயிட் பண்ணுங்க வர்றேன் என்றான்.. பாருடா என்று அவன் வரும் வரை காத்திருந்தேன்...
தர்ஷன் எழுதியது...

நான் ஒரு விலங்கு.
என் பெயர் ஒட்டகச்சிவிங்கி.
எனக்கு நீண்ட கழுத்து உண்டு.
என் கழுத்தில் ஏழு எலும்புகள் உள்ளன.
என்று எழுதியிருந்தான்.
தர்ஷன் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் ஏழு எலும்புகள் இருக்குமா?என்று கேட்டேன்...மிஸ் ஒட்டகச்சிவிங்கிக்கு மட்டுமில்ல மிஸ்...நம்ம கழுத்துலயும் ஏழு எலும்புகள் தான் இருக்கும் மிஸ் என்றான்.
நான் நேத்தே...எங்க அப்பா கிட்ட ஃபோன் வாங்கி ஒட்டகச்சிவிங்கியப் பத்தி படிச்சு பார்த்தேன் மிஸ் என்றானே பார்க்கலாம்...
இன்னும் சில விஷயங்கள் ஒட்டகச்சிவிங்கி பற்றிக் கூறினான்...
மிகவும் சந்தோஷமான இந்த தருணத்தை எண்ணும் எழுத்தும் டெலிகிராம் குழுவில் நான் பதிவிட்டேன்.
அவனுடைய புகைப்படத்தை Pics of the day ல் இடம் பெறச் செய்தது எண்ணும் எழுத்தும் குழு...
தர்ஷன் திறமையான மாணவன்.திறமைக்குத் தீனி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்..
இல்லையெனில் வேலையைக் காண்பித்து விடுவான்....
உதாரணமாக ஆசியாவில் முதலாவது மிக நீளமான ஆறு எது என்று நான் கூறினால், அப்போ இரண்டாவது மூன்றாவது எது மிஸ் என்று கேட்பான். அனைத்திற்கும் தயாராகத் தான் செல்ல வேண்டும்...
நிறைய சந்தேகங்கள் கேட்பான்...முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு கேட்பான்...
ஆதலால் நம்மைக் கிண்டல் செய்கிறான் என்றெல்லாம் நான் நினைக்க முடியாது...
ஆர்வத்தில் கேட்கிறான்... அம்புட்டு தான்...
அட்டகாசம் தொடரும்...
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}