டெல்லி: 2022ம் ஆண்டிண்கான 70வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளில் தமிழ் மொழிக்கு மட்டும் ஆறு விருதுகள் கிடைத்துள்ளன. பொன்னியின் செல்வன் 1 மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய 2 படங்களில் இருந்து இந்த விருதுகள் கிடைத்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் இந்திய மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களுக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படு. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
2022ம் ஆண்டு தமிழில் வெளிவந்த சிறந்த பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு கிடைத்துள்ளது. பெரும்பான்மையாக 4 விருதுகள் இப்படத்திற்கு கிடைத்துள்ளது. 2022இல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர் மற்றும் நடிகையர் நடித்திருந்தனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். வரலாற்று காவியத்தை படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் மணிரத்னம். இப்படம் 2 பாகங்களாக வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.
2022ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதில் பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன.
பொன்னியின் செல்வன் 1 படம் பெற்ற விருதுகள்
சிறந்த திரைப்படம்
சிறந்த பின்னணி இசை (ஏ.ஆர்.ரஹ்மான்)
சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்)
சிறந்த ஒலிப்பதிவு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி)
திருச்சிற்றம்பலத்திற்கு 2 விருதுகள்
இதே போல 2022ம் ஆண்டு வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன் அசத்தலாக நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. ஷோபனா என்ற கேரக்டரில் அட்டகாசமாக நடித்திருந்தார் நித்யா மேனன். சமீபத்தில்தான் பிலிம்பேர் விருதைப் பெற்றிருந்தார் நித்யா மேனன். இப்போது அவரைத் தேடி தேசிய விருதே வந்து விட்டது.
சிறந்த நடிகை- நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த நடன காட்சிகள் - ஜானி - சதீஷ் (திருச்சிற்றம்பலம்)
'மேகம் கருக்காதா பெண்ணே...பெண்ணே' என்ற பாடலுக்காக சிறந்த நடனத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}