திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடலில் கவிழ்ந்த பைபர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆறு மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருச்செந்தூர் கடலில் நேற்று மீனவர்கள் மீன் பிடிக்க படகில் சென்றனர். மீன்பிடித்து கரை திரும்பும் போது ராட்சத அலைகள் ஒன்றோடு ஒன்றாக மோதிக் கொண்டிருந்தன. திடீரென்று எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் படகு மோதி கவிழ்ந்தது. இதில் ஒரு படகில் இருந்த 6 மீனவர்கள் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர்.
தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த மீட்பு படையினர் கடலில் விழுந்த மீனவர்களை ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில் படகில் உள்ள ரூபாய் 3.5 லட்சம் வலைகள் கடலில் விழுந்து நாசமாகின. படகு எஞ்சின்கள் சேதம் அடைந்தது. இதனால் மீனவர்கள் சோகத்துடன் கரைக்கு திரும்பினர்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}