திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடலில் கவிழ்ந்த பைபர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆறு மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருச்செந்தூர் கடலில் நேற்று மீனவர்கள் மீன் பிடிக்க படகில் சென்றனர். மீன்பிடித்து கரை திரும்பும் போது ராட்சத அலைகள் ஒன்றோடு ஒன்றாக மோதிக் கொண்டிருந்தன. திடீரென்று எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் படகு மோதி கவிழ்ந்தது. இதில் ஒரு படகில் இருந்த 6 மீனவர்கள் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர்.
தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த மீட்பு படையினர் கடலில் விழுந்த மீனவர்களை ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில் படகில் உள்ள ரூபாய் 3.5 லட்சம் வலைகள் கடலில் விழுந்து நாசமாகின. படகு எஞ்சின்கள் சேதம் அடைந்தது. இதனால் மீனவர்கள் சோகத்துடன் கரைக்கு திரும்பினர்.
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}