அக்ரா, கானா: கானா நாட்டில் 63 வயசான பூசாரி ஒருவர், 12 வயதேயான சிறுமியை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். இது அந்த ஊர் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் அந்த மதத் தலைவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. இவர் தலைமை பூசாரியாகவும் இருக்கிறார்.
கானா தலைநகர் அக்ராவுக்கு அருகே உள்ளது நுங்குவா பிராந்தியம். இந்தப் பகுதியில் உள்ள ஒரு இனக் குழுவின் தலைவராக இருந்து வருபவர் நுமோ பார்க்கெட்டி லாவே சுரு. இவருக்கு தற்போது 63 வயதாகிறது. இவர் 12 வயது சிறுமியைக் கல்யாணம் செய்து கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரை எல்லோரும் கோபோர்பு வுலோமோ என்று அழைப்பார்கள்.. நம்ம ஊர் குலதெய்வம் கோவில்களில் பூசாரிகள் இருப்பார்கள் இல்லையா.. அது போலத்தான் இவரும். நுங்கா பகுதியில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இவர்தான் தலைமை பூசாரி ஆவார்.
கானாவில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகும். ஆனால் இந்த பூசாரி, 12 வயதுப் பெண்ணை கல்யாணம் செய்து அனைவரையும் அதிர வைத்துள்ளார். கிராமத்தைச் சேர்ந்த அந்த பூசாரியின் கல்யாணத்தில் ஊர் மக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். வெள்ளை நிற உடையில் அந்த சிறுமி உள்ளார். அவரைச் சுற்றிலும் உள்ள பெண்கள், அச்சிறுமியை கேலி செய்தபடி உள்ளனர். புருஷனை மனம் கோணாமல் பார்த்துக்க என்றும் அட்வைஸ் செய்கின்றனர். பார்க்கவே படு மோசமாக இருக்கிறது இந்தக் காட்சிகள்.
சென்ட் அடிச்சுக்கோ.. அப்பத்தான் உன் புருஷனுக்கு உன்னைப் பிடிக்கும் என்றும் ஒரு பெண் கூறுவது வீடியோவில் கேட்கிறது. இந்தத் திருமணம் கானாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இந்த பூசாரி கலங்கவில்லை, பயப்படவில்லை. மாறாக இவருக்கு ஏகப்பட்ட மதப் பிரிவுகளின் மதத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}