டெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடந்த பாதுகாப்பு ஒத்திகை தோல்வியில் முடிந்தது. போலி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படாததால் 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில், சட்டவிரோதமாக நுழைய முயன்ற 5 வங்கதேச நாட்டினர் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு சம்பவங்களும் செங்கோட்டையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. சுதந்திர தின விழா நெருங்கி வரும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் சமீபத்தில் ஒரு பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. டெல்லி போலீஸ் ஸ்பெஷல் செல் இந்த ஒத்திகையை நடத்தியது. சுதந்திர தினம் நெருங்கி வருவதால், செங்கோட்டையில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை சோதிப்பதே இதன் நோக்கம். காரணம் செங்கோட்டையில்தான் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

பாதுகாப்பு ஒத்திகையின்போது, ஒரு போலி வெடிகுண்டு வைக்கப்பட்டது. ஆனால், அதை பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இதனால், அங்கு பணியில் இருந்த 7 காவலர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "போலி வெடிகுண்டுடன் வந்த குழு, செங்கோட்டையின் பிரதான வாயிலில் இருந்த பாதுகாப்பை எளிதாக கடந்து சென்றது. அந்த பொருளை கண்டுபிடிக்காதது, பணியில் இருந்தவர்களின் கவனக்குறைவை காட்டுகிறது" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக உள் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் என்னென்ன என்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா நெருங்கி வருவதால், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், செங்கோட்டைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 5 வங்கதேச நாட்டினரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் வயது 20 முதல் 25 வரை இருக்கும். அவர்கள் டெல்லியில் கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. "அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து வங்கதேச அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எதற்காக செங்கோட்டைக்குள் நுழைய முயன்றார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}