செங்கோட்டையில் தோல்வியுற்ற பாதுகாப்பு ஒத்திகை.. குண்டை கண்டுபிடிக்காத போலீஸார் சஸ்பெண்ட்

Aug 06, 2025,10:37 AM IST

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடந்த பாதுகாப்பு ஒத்திகை தோல்வியில் முடிந்தது. போலி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படாததால் 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


அதே நேரத்தில், சட்டவிரோதமாக நுழைய முயன்ற 5 வங்கதேச நாட்டினர் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு சம்பவங்களும் செங்கோட்டையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. சுதந்திர தின விழா நெருங்கி வரும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லி செங்கோட்டையில் சமீபத்தில் ஒரு பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. டெல்லி போலீஸ் ஸ்பெஷல் செல் இந்த ஒத்திகையை நடத்தியது. சுதந்திர தினம் நெருங்கி வருவதால், செங்கோட்டையில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை சோதிப்பதே இதன் நோக்கம்.  காரணம் செங்கோட்டையில்தான் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.




பாதுகாப்பு ஒத்திகையின்போது, ஒரு போலி வெடிகுண்டு வைக்கப்பட்டது. ஆனால், அதை பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இதனால், அங்கு பணியில் இருந்த 7 காவலர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "போலி வெடிகுண்டுடன் வந்த குழு, செங்கோட்டையின் பிரதான வாயிலில் இருந்த பாதுகாப்பை எளிதாக கடந்து சென்றது. அந்த பொருளை கண்டுபிடிக்காதது, பணியில் இருந்தவர்களின் கவனக்குறைவை காட்டுகிறது" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இதுதொடர்பாக உள் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் என்னென்ன என்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா நெருங்கி வருவதால், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையில், செங்கோட்டைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 5 வங்கதேச நாட்டினரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் வயது 20 முதல் 25 வரை இருக்கும். அவர்கள் டெல்லியில் கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. "அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து வங்கதேச அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எதற்காக செங்கோட்டைக்குள் நுழைய முயன்றார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: நூர் அகமது அபாரம்.. கொல்கத்தாவை 32 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

news

தமிழ்ப் புத்தாண்டு .. பராபவத் தாய் பிறப்பெடுத்தாள் ஆண்டு அறுபதில் அவளும் ஒருதாய்!

news

புத்தாண்டே வருக, புன்னகையுடன் வாழ்த்திடு, ஒவ்வொருவரின் வாழ்விலும் புது பொலிவை தந்திடு!

news

உன் குரலில் என் இதயம் இளைப்பாறுகிறது.. அவளின் (ல்) அவன்! (9)

news

தமிழ்ப் புத்தாண்டில் இதைக் கற்போம்.. பூ கோர்க்கலாம் வாங்க!

news

Tamil New Year: முத்திரை பதிக்கப் போகும் தமிழ்ப் புத்தாண்டு.. சித்திரை மாத சிறப்புகள்!

news

கோவிலில் நடந்த கலாட்டா.. விஷாலின் விளையாட்டுகள் 10

news

சிந்தனைச் சிதறல்.. குறையை குறைவாய்க் காண்போம்.. நிறையை நிறைவாய்க் காண்போம்!

news

Dr Ambedkar Birth Anniversary: அறிவின் உச்சம் அம்பேத்கரின் சட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்