மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி மத்திய பாஜக அரசு வெட்கப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Feb 27, 2026,06:05 PM IST

சென்னை: மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை  எண்ணி மத்திய பாஜக அரசு வெட்கப்பட வேண்டும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு எதிராக சிபிஐ சுமத்தியிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கில் எந்தவொரு சதித் திட்டமும் நடந்ததற்கான சான்றுகள் இல்லை. சிபிஐ-யின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ஜோடிக்கப்பட்ட வழக்காக இது தெரிகிறது. குற்றப்பத்திரிகை பெரிதாக இருக்கிறதே தவிர அதில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை, வெற்றுக் காகிதங்களாகவே அவற்றைப் பார்க்க முடிகிறது என்று கடுமையாக விமர்சித்தது.




இதனையடுத்து நீதிமன்றம் தன்னை நிரபராதி என்று அறிவித்தவுடன், அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நானும் மனிஷ் சிசோடியாவும் ஒரு பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டோம். எங்கள் மீது சேறு பூசப்பட்டது. இன்று உண்மை வென்றுள்ளது. நான் மிகவும் நேர்மையானவன். கடவுள் எங்களுடன் இருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பாஜக அரசு குறுகிய அரசியல் லாபத்திற்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக்கூடாது.  டெல்லி மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி பாஜக அரசு கொஞ்சமாவது வெட்கப்படுங்கள். மதிப்பிற்குரிய எனது நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா இருவரும் இவை அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொண்டு, உண்மையை வெளிகொண்டு வந்ததற்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்