74வது குடியரசு தின விழா : டில்லி ராஜ்பாத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

Jan 26, 2023,09:58 AM IST
டில்லி : நாட்டின் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டில்லியில் உள்ள ராஜபாத்தில் ஜனாதிபதி திரெளபதி மும்மு தேசியக் கொடியை ஏற்றினார். இவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் குடியரசு தினம் இதுவாகும்.



காலை 8 மணிக்கு துவங்கிய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி கலந்து கொண்டுள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

குடியரசு தின அணிவகுப்புக்கள் ராஜ்பாத் துவங்கி இந்தியா கேட் வரை நடைபெற்றன. குடியரசு தின அணிவகுப்புக்கள் காலை 10.30 மணிக்கு துவங்கி பகல் 12 வரை நடைபெற்றன. இந்த ஆண்டு இந்திய கலாச்சாரம், வீரதீர செயல்கள், ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் குடியரசு தின அணிவகுப்புக்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி திரெளபதி மும்மு, சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்