திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

Dec 16, 2025,04:13 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


திருவள்ளூர், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கு வழக்கம் போல உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது மாணவர்களின் நடைமேடையில் அமர்ந்து மாணவர்கள் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்பொழுது திடீர் என பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த சுவர் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் மோகித் மீது விழுந்தது. சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தார்.


இந்த தகவல் அறிந்து பள்ளிக்கு மாணவனின் உறவினர்கள், பெற்றோர் விரைந்தனர். பள்ளி நிர்வாகத்துடன் மாணவனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழமையான பள்ளி சுவரை பராமரிக்கவில்லை. பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவனின் உறவினர்கள் பள்ளியின் மீது குற்றம் சாட்டினர்.




மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களுடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மாணவனின் உறவினர்கள் சமாதானம் அடைய வில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!

news

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

news

தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!

news

மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!

அதிகம் பார்க்கும் செய்திகள்