திருவள்ளூர்: திருவள்ளூர், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கு வழக்கம் போல உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது மாணவர்களின் நடைமேடையில் அமர்ந்து மாணவர்கள் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்பொழுது திடீர் என பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த சுவர் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் மோகித் மீது விழுந்தது. சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்து பள்ளிக்கு மாணவனின் உறவினர்கள், பெற்றோர் விரைந்தனர். பள்ளி நிர்வாகத்துடன் மாணவனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழமையான பள்ளி சுவரை பராமரிக்கவில்லை. பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவனின் உறவினர்கள் பள்ளியின் மீது குற்றம் சாட்டினர்.

மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களுடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மாணவனின் உறவினர்கள் சமாதானம் அடைய வில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}