லூதியானாவில் வாயுக் கசிவு.. 9 பேர் பலி.. 10க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Apr 30, 2023,10:56 AM IST
லூதியானா:  பஞ்சாப் மாநிம் லூதியானாவில் ஒரு தொழிற்சாலையில் காஸ் கசிவு ஏற்பட்டதில் 9 பேர் மூச்சுத் திணறி பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

லூதியானாவின் கியாஸ்புரா என்ற இடத்தில் ஒறு தொழிற்சாலை உள்ளது. அங்கிருந்து திடீரென காஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக தகவல் கிடைத்து டாக்டர்கள், ஆம்புலன்ஸ்கள் விரைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.




ஆனால் 9 பேர் மூச்சுத் திணறலால் உயிரிழந்துவிட்டனர். 10க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

என்ன மாதிரியான காஸ் கசிந்தது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. தொழிற்சாலை அருகில் வசித்து வரும் மக்களும் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்