லூதியானாவில் வாயுக் கசிவு.. 9 பேர் பலி.. 10க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Apr 30, 2023,10:56 AM IST
லூதியானா:  பஞ்சாப் மாநிம் லூதியானாவில் ஒரு தொழிற்சாலையில் காஸ் கசிவு ஏற்பட்டதில் 9 பேர் மூச்சுத் திணறி பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

லூதியானாவின் கியாஸ்புரா என்ற இடத்தில் ஒறு தொழிற்சாலை உள்ளது. அங்கிருந்து திடீரென காஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக தகவல் கிடைத்து டாக்டர்கள், ஆம்புலன்ஸ்கள் விரைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.




ஆனால் 9 பேர் மூச்சுத் திணறலால் உயிரிழந்துவிட்டனர். 10க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

என்ன மாதிரியான காஸ் கசிந்தது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. தொழிற்சாலை அருகில் வசித்து வரும் மக்களும் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்