லூதியானாவில் வாயுக் கசிவு.. 9 பேர் பலி.. 10க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Apr 30, 2023,10:56 AM IST
லூதியானா:  பஞ்சாப் மாநிம் லூதியானாவில் ஒரு தொழிற்சாலையில் காஸ் கசிவு ஏற்பட்டதில் 9 பேர் மூச்சுத் திணறி பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

லூதியானாவின் கியாஸ்புரா என்ற இடத்தில் ஒறு தொழிற்சாலை உள்ளது. அங்கிருந்து திடீரென காஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக தகவல் கிடைத்து டாக்டர்கள், ஆம்புலன்ஸ்கள் விரைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.




ஆனால் 9 பேர் மூச்சுத் திணறலால் உயிரிழந்துவிட்டனர். 10க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

என்ன மாதிரியான காஸ் கசிந்தது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. தொழிற்சாலை அருகில் வசித்து வரும் மக்களும் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்