97 வயசு.. கொன்று குவித்தது 10,000 பேர்.. நாஜிகளின் முன்னாள் "தாய்க்கிழவி"க்கு தண்டனை!

Dec 31, 2022,08:53 PM IST

பான்: நாஜிகளின் படையில் இடம் பெற்றிருந்த 97 வயதான போர்க்குற்றவாளி பெண்மணிக்கு ஜெர்மனியைச் 
சேர்ந்த நீதிமன்றம் 2 வருட கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.  இது ரொம்பத் தாமதமான தீர்ப்பு என்று பலரும் குறை கூறியுள்ளனர்.

10,000 பேரைக் கொன்று குவித்த வழக்கில் இவர் மீது வழக்கு நடந்து வந்தது என்பது நினைவிருக்கலாம். 
தற்போது  விதிக்கப்பட்டுள்ள  2 வருட சிறைத் தண்டனையும் கூட சஸ்பெண்ட் செய்து வைக்கப்பட்டுள்ளது.


இந்த போர்க்குற்றவாளியின் பெயர் இர்ம்கார்ட் பர்க்னர். இவர் 1943ம் ஆண்டு முதல் 45 வரையிலான காலகட்டத்தில்,போலந்து நாட்டில் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்டட்காப் முகாமில் டைப்பிஸ்டாகவும், 
ஸ்டெனோகிராபராகவும் பணியாற்றினார். அந்தசமயத்தில்அந்த முகாமில் அடைக்கப்பட்டிருந்த 10,505 பேர்
 கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில்தான் இர்ம்கார்ட் மீதும் வழக்கு தொடரப்பட்டு 
விசாரணை நடந்து வந்தது.

வடக்கு ஜெர்மனியில் உள்ள இட்ஸோ என்ற இடத்தில் உள்ள கோர்ட் இந்த வழக்கில் இப்போது தண்டனையை அறிவித்துள்ளது. 

குற்றச் சம்பவம் நடந்தபோது இர்ம்கார்ட் பதின் பருவத்தில் இருந்தவர் என்பதால் அவர் மீதான வழக்கு
 பதின்பருவத்தினருக்கான கோர்ட்டில்தான் நடந்து வந்தது. எனவே அவருக்கு தற்போது
 விதிக்கப்பட்டுள்ள தண்டனயைும் அதற்கேற்பவே கொடுக்கப்பட்டுள்ளதாக கோர்ட் தெரிவித்துள்ளது.
இர்ம்கார்ட் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த ஆண்டுதான் அவர் போலீஸாரிடம் சிக்கினார்.

 அவர் பணியாற்றிய ஸ்டட்கார்ப் முகாமில் யூதர்கள் அல்லாத போலந்துக்காரர்களும், கணிசமான யூதர்களும்,
 பால்டிக் நாடுகளைச் சேர்ந்த பிற போர்க்கைதிகளும் என லட்சக்கணக்கானோர் அடைக்கப்பட்டிருந்தனர். 
இதில் 60,000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இவர்களில் 10,000க்கும் மேற்பட்டோர் 
நாஜிப் படையினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்