சேலத்தில்.. பஸ்ஸில் இடம் பிடிப்பது தொடர்பாக.. மாணவர்களிடையே மோதல்... ஒருவர் பலி

Feb 11, 2025,03:57 PM IST

சேலம்: சேலத்தில் பள்ளி பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக 2 மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.


சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் நேற்று பள்ளி முடிந்து மாணவர்கள் பள்ளி பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது, 9ம் வகுப்பு படிக்கும் சரவணன் மற்றும் கந்தகுரு என்ற இரண்டு மாணவர்களிடையே பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக  மோதல் ஏற்பட்டுள்ளது.


இந்த மோதலில் சரவணனை கந்தகுரு பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. சரவணனுக்கு  மார்பு பகுதியில் பலமாக அடி விழுந்ததால் , ரயிலே ஊழியர் கணபதியின் மகன் சரவணன் உயிரிழந்துள்ளார். மயங்கி விழுந்த சரவணனை சிகிச்சைக்காக  அருகில் உள்ள மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை  சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்துள்ளான்.




தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கை பிடிப்பது தொடர்பான இரு மாணவர்களுக்கே ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்திய பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவருக்கு ஏற்கனவே உடல் நலப்பிரச்சனை இருந்ததாக கூறப்பட்டதால், தற்போது வரை வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடப்பாடி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!

news

ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்

news

விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

news

தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

news

பெரும்பான்மையை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் சொல்லிருக்கு.. கமல்ஹாசன்

news

விஜய் ஆட்சி அமைக்க பெருகும் ஆதரவு... இவங்களா இப்படி பேசுறாங்க? ஒரே வாரத்தில் மாறிய சூழல்!

news

விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. அபிஷேக் மனு சிங்வி

news

தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ

news

ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்