சேலத்தில்.. பஸ்ஸில் இடம் பிடிப்பது தொடர்பாக.. மாணவர்களிடையே மோதல்... ஒருவர் பலி

Feb 11, 2025,03:57 PM IST

சேலம்: சேலத்தில் பள்ளி பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக 2 மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.


சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் நேற்று பள்ளி முடிந்து மாணவர்கள் பள்ளி பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது, 9ம் வகுப்பு படிக்கும் சரவணன் மற்றும் கந்தகுரு என்ற இரண்டு மாணவர்களிடையே பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக  மோதல் ஏற்பட்டுள்ளது.


இந்த மோதலில் சரவணனை கந்தகுரு பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. சரவணனுக்கு  மார்பு பகுதியில் பலமாக அடி விழுந்ததால் , ரயிலே ஊழியர் கணபதியின் மகன் சரவணன் உயிரிழந்துள்ளார். மயங்கி விழுந்த சரவணனை சிகிச்சைக்காக  அருகில் உள்ள மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை  சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்துள்ளான்.




தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கை பிடிப்பது தொடர்பான இரு மாணவர்களுக்கே ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்திய பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவருக்கு ஏற்கனவே உடல் நலப்பிரச்சனை இருந்ததாக கூறப்பட்டதால், தற்போது வரை வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடப்பாடி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்