ஒரே வார்த்தையில் பொன்னியின் செல்வன் கதையை சொன்ன கார்த்தி... கலகலத்த கோவை!

Apr 19, 2023,03:34 PM IST
கோவை : பொன்னியின் செல்வன் படத்தின் கதையை நடிகர் கார்த்தி ஒரே வரியில் சொன்னதை கண்டு கோவை ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த கோலிவுட்டs மிரண்டு போய் உள்ளது. எப்படிய்யா இவர் ஒரே வரியில சிம்பிளா சொல்லி முடிச்சாரு என கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழில் வெளிவந்த மிக நீண்ட நாவல் என்ற பெருமையை பெற்றது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். இந்த நாவலை கல்கி மூன்று பாகங்களாக எழுதி, வெளியிட்டார். இந்த கதையை சினிமாவாக எடுக்கும் முயற்சியில் எம்ஜிஆர் முதல் பலரும் பல ஆண்டுகளாக முயற்சி செய்து தோற்றனர். கடைசியாக டைரக்டர் மணிரத்னம் பல ஆண்டு கால முயற்சிக்கு பிறகு பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக இயக்கினார். ஆரம்பத்திலேயே இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளதாக சொல்லி விட்டனர்.



பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2022 ம் ஆண்டின் இறுதியில் பான் இந்தியன் மூவியாக வெளியிடப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது. பல சாதனைகளையும் இந்த படம் முறியடித்தது என்றே சொல்லலாம். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஏப்ரல் 28 ம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகளில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த நடிகர், நடிகைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கோவையில் நடந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ப்ரொமோஷன் நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்தில் வரும் சிம்பிளான டயலாக்குகள் தனக்கு பிடிக்கும் என சொல்லி, தனக்கு பிடித்த சீன் ஒன்றை சொன்னார். அப்போது, "வந்தியத் தேவன் குதிரையில் போய் கொண்டிருக்கையில் பெரியவர் ஒருவர் கேட்பார், எங்கே போகிறாய் என்று. ஒரு சொத்து பிரச்சனை. அதற்கு நான் போய் தான் தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்காக தான் போய் கொண்டிருக்கிறேன் என்பான்.

அப்படி என்ன பிரச்சனை என அந்த பெரியவர் கேட்க, வந்தியத் தேவனோ, அது வேறு ஒன்றும் இல்லை. சொத்து, அண்ணன் மகனுக்கா இல்லை தம்பி பேரனுக்கா என்பது தான் என வந்தியத் தேவன் பதில் சொன்வான்" என்றார். உடனே ரசிகர்களை பார்த்த, "என்ன புரியுதா? அண்ணன் மகன் மதுராந்தகன். ரகுமான் சார் நடித்த கேரக்டர். தம்பி பேரனுக்கா சுந்தரச் சோழனின் மகன் ஆதித்ய கரிகாலனுக்கா என்பது. இதுக்கு மேலேயும் யாராவது கதை புரியலைன்னு சொன்னீங்கனா பிச்சுடுவேன் பிச்சு" என செல்லமாக ரசிகர்களை மிரட்டினார் கார்த்தி.

சூர்யா ஒரே மூச்சில் இலக்கியங்களில் வரும் பூக்களின் பெயர்களை சொல்லி தான் அசத்தினார் என்றால், கார்த்தி அதற்கும் ஒரு படி மேலே போய் பொன்னியின் செல்வன் கதையையே ஒரே வரியில் சொல்லி முடித்து விட்டாரே என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். கார்த்தி பேசிய இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்