உடைந்தது தேசியவாத காங்கிரஸ்.. சரத் பவார் தம்பி அஜீத்.. துணை முதல்வராக பதவியேற்பு!

Jul 02, 2023,02:58 PM IST
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைந்தது போல தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைந்துள்ளது. பாஜக அரசுடன் சரத் பவாரின் தம்பி அஜீத் பவார் கை கோர்த்து துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

பாஜக முகாமுக்கு அஜீத் பவார் தாவுவது இது முதல் முறையல்ல. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் ஆட்சியமைக்க தயாரானபோது கட்சியை உடைக்க முயன்று பாஜக பக்கம் போனவர்தான் அஜீத் பவார். ஆனால் போன வேகத்திலேயே மீண்டும் தேசியவாத காங்கிரஸுக்கே திரும்பி வந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜக பக்கம் தாவியுள்ளார். சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சரத் பவாரின் மகள் சுப்ரியூ சூலேவும், பிரபுல் படேலும் நியமிக்கப்பட்டார்கள். அஜீத் பவாருக்கு எந்தப் பதவியும் தரப்படவில்லை. இதனால் அவர் ஆத்திரமடைந்தார். ஆனாலும் அமைதி காத்து வந்தார்.



இந்த நிலையில்தான் இன்று திடீர் திருப்பமாக மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) - பாஜக கூட்டணி அரசில் இணைந்துள்ளார் அஜீத் பவார். துணை முதல்வராக அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு 20க்கும் மேற்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அஜீத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளதன் மூலம் மகாராஷ்டிராவில் 2வது முறையாக ஒரு பெரிய கட்சி உடைந்துள்ளது. முதலில் சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே மூலம் சிலரை வெளியே இழுத்து அவரை முதல்வராக்கியது பாஜக. தற்போது தேசியவாத காங்கிரஸை உடைத்து அஜீத் பவாரை துணை முதல்வராக்கியுள்ளது.

இந்த விவகாரம் மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பாஜகவுக்கு எதிராக சரத் பவார் தீவிரமாக பணியாற்றுவதில்லை. அதானியைக் கூட புகழ்ந்துதான் பேசி வருகிறார். அப்படி இருந்தும் அவரது கட்சி உடைக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரத்பவாரின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்