Beach to Chepauk: ஜனவரி மாதம் வரை பறக்கும் ரயில் சேவை ரத்து!

Jun 01, 2023,12:28 PM IST
சென்னை : சென்னையில் ஜூலை 01 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரையிலான 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில்  4வது வழித்தட ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதேசமயம், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகப்படுத்தவும் திட்டமிட்டு 1985 ம் ஆண்டு முதல் ரயில்வே விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே சுமார் ரூ.500 கோடியில் 3வது கட்டமாக நடந்த வந்து பறக்கும் ரயில் சேவைக்கான பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. 

தற்போது இந்த பிரச்சவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் பறக்கும் ரயில் திட்ட பணிகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இந்த பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஏற்கனவே முடிந்து விட்டது. இந்நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் சென்னை எழும்பூர் வரும் பயணிகள் பிற பகுதிகளுக்கு செல்வது சுலபமாகி விடும். இதனால் சென்னையில் இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்