Beach to Chepauk: ஜனவரி மாதம் வரை பறக்கும் ரயில் சேவை ரத்து!

Jun 01, 2023,12:28 PM IST
சென்னை : சென்னையில் ஜூலை 01 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரையிலான 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில்  4வது வழித்தட ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதேசமயம், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகப்படுத்தவும் திட்டமிட்டு 1985 ம் ஆண்டு முதல் ரயில்வே விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே சுமார் ரூ.500 கோடியில் 3வது கட்டமாக நடந்த வந்து பறக்கும் ரயில் சேவைக்கான பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. 

தற்போது இந்த பிரச்சவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் பறக்கும் ரயில் திட்ட பணிகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இந்த பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஏற்கனவே முடிந்து விட்டது. இந்நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் சென்னை எழும்பூர் வரும் பயணிகள் பிற பகுதிகளுக்கு செல்வது சுலபமாகி விடும். இதனால் சென்னையில் இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்