Beach to Chepauk: ஜனவரி மாதம் வரை பறக்கும் ரயில் சேவை ரத்து!

Jun 01, 2023,12:28 PM IST
சென்னை : சென்னையில் ஜூலை 01 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரையிலான 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில்  4வது வழித்தட ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதேசமயம், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகப்படுத்தவும் திட்டமிட்டு 1985 ம் ஆண்டு முதல் ரயில்வே விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே சுமார் ரூ.500 கோடியில் 3வது கட்டமாக நடந்த வந்து பறக்கும் ரயில் சேவைக்கான பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. 

தற்போது இந்த பிரச்சவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் பறக்கும் ரயில் திட்ட பணிகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இந்த பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஏற்கனவே முடிந்து விட்டது. இந்நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் சென்னை எழும்பூர் வரும் பயணிகள் பிற பகுதிகளுக்கு செல்வது சுலபமாகி விடும். இதனால் சென்னையில் இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்