மத்திய பட்ஜெட் 2023 : நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

Feb 01, 2023,09:05 AM IST
புதுடில்லி : லோக்சபாவில் இன்று (பிப்ரவரி 01) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் இன்று அலுவல் துவங்கியதும், நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை துவங்கினார்.



இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, பட்ஜெட் தாக்கலுக்கான ஜனாதிபதியின் அனுமதியை பெற்றார் நிர்மலா சீதாராமன். அதைத் தொடர்ந்து பார்லிமென்ட் கட்டிட நார்த் பிளாக்கில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு லோக்சபாவிற்கு பட்ஜெட் உரையுடன் புறப்பட்டார்.

மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், 2024 ம் ஆண்டு பிப்ரவரி 01 ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக மட்டுமே இருக்கும். 

இதனால் இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையிலான பல அறிவிப்புக்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டை நாடே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்