சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 11ம் தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாடு அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்துவது வழக்கமானது. அந்த வகையில் மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஜூலை 11ம் தேதி அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபிக்கள், ஏடிஜிபிக்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டம் ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துவார்.
சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் ஆர். என். ரவி. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழவில்லை என்று கூறியிருந்தார். தொடர்ந்து பாஜக, அதிமுக தலைவர்களும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, கொலைகள் அதிகரித்து விட்டன என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கேற்ப பல சம்பவங்களும் நடந்துள்ளன.
தொடர்ந்து ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே உரசல் இருந்து கொண்டே வருகிறது. தற்போது ஆளுநர் டெல்லி போயுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியும் உள்ளார். இந்தப் பின்னணியில் முதல்வர் தலைமையில், சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் இது வழக்கமான கூட்டம்தான் என்று அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தின்போது அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுரைகள் பல்வற்றை சொல்லும் வாய்ப்புள்ளது. சமீபத்தில் கோவையில் டிஐஜி விஜயக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே காவல்துறை அதிகாரிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில், ஊக்கம் தரும் வகையில் முதல்வர் பேசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!
டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலையின் ஹைக்கூ கவிதைகள்!
ஆலோலம் பாட்டுக் கேட்குதே
{{comments.comment}}