தலைநகரில் "அண்ணா".. தமிழ் நகரில் "கலைஞர்".. பிரமாண்ட அறிவுத் திருக்கோவில்!

Jul 13, 2023,09:38 AM IST

சென்னை: சென்னையில் மறைந்த கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் அமைக்கப்பட்டது போல, மதுரையில் பிரமாண்டமாக மு.க.ஸ்டாலின் அரசால் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் வருகிற 15ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இந்த பிரமாண்ட அறிவுத் திருக்கோவிலை திமுக அரசு நிர்மானித்துள்ளது. தென் தமிழ்நாட்டின் புதிய அடையாளமாக மாறப் போகும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம்,  தென் மாவட்ட மக்களின் அறிவுத் தாகத்திற்கு தீனி போடும் என்று உறுதியாக நம்பலாம்.



சுமார் 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த பிரமாண்ட நவீன நூலகம் கட்டப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே  மிகப் பெரிய நூலகம் என்ற பெயரையும் இது பெற்றுள்ளது. மொத்தம் அடித்தளத்தையும் சேர்த்து 8 தளங்களுடன் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 120.75 கோடி செலவில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது.

அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி, நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக் கூடம், ஓய்வரை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கைப் பிரிவு ஆகியவை அமைந்துள்ளன.

முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம் நாளிதழ்கள் பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு ஆகியவை இடம் பெற்றுள்ளன. 2வது தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.

3வது தளத்தில், ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. 4வது தளத்தில் எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30,000 நூல்களுடனான பகுதி அமைந்துள்ளது.

5வது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.  6வது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் உள்ளன.

இந்த நூலகத் திறப்பு விழா ஜூலை 15ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைத் திறந்து வைக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில���, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15 அன்று பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் திறந்து வைக்கிறேன்.

#கலைஞர்100-இல் இதுவரை அமைக்கப்பட்ட மருத்துவமனை, நூலகம், கோட்டம் ஆகியவையும் இன்னும் அமையவிருப்பவையும் காலம் கடந்து நிற்கும்! மக்களுக்கு என்றென்றும் பயன் தரும்! கலைஞரின் புகழை உரக்கச் சொல்லும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்