சென்னை: காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக இந்தியா முழுவதும் கோடைக்கால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப அபாயத்தை (Heat Risk) எதிர்கொள்ளும் இந்தியாவின் மிக முக்கியமான 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பிடித்துள்ளதாகப் புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) வெளியிட்டுள்ள இந்த ஆய்வு, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் ஆரோக்கியம் இந்த வெப்ப அதிகரிப்பால் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்பதை விரிவாக விளக்குகிறது.
ஆய்வின் முக்கிய அம்சங்கள்:
இந்த ஆய்வின்படி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வெப்ப அபாயமானது வெறும் வெப்பநிலை உயர்வை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல; மாறாக, அதிகரித்து வரும் வெப்பம், மக்கள் தொகை அடர்த்தி மற்றும் மக்களின் உடல்நலக் குறைபாடுகள் ஆகிய மூன்றின் கூட்டு விளைவாகவே பார்க்கப்படுகிறது.
இரவு நேர வெப்பம் அதிகரிப்பு : கடந்த 2012 முதல் 2022 வரையிலான பத்து ஆண்டுகளில், சென்னை போன்ற நகரங்களில் கோடைக்காலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக 4 நாட்கள் வெப்பமான இரவுகள் பதிவாகியுள்ளன. சென்னை, மதுரை மற்றும் திருச்சி போன்ற பெரிய நகரங்களில் பகலில் உறிஞ்சப்படும் வெப்பம், இரவில் மெதுவாக வெளியேற்றப்படுவதால், இரவிலும் வெப்பமான சூழல் இருந்தது. இது மனித உடல் வெப்பத்தை சமன்படுத்த முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாகிறது.
நோயாளிகளுக்கு அதிகரிக்கும் ஆபத்து:

தமிழ்நாட்டில் நீரிழிவு (Diabetes), ரத்த சோகை (Anaemia) மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் கடும் வெப்பத்தைச் சகித்துக் கொள்ளும் திறன் குறைந்தவர்களாக இருப்பதால், வெப்ப அலைகளின் போது இவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.
பொருளாதார இழப்பு மற்றும் வேலைவாய்ப்பு:
வெப்ப அழுத்தம் காரணமாக 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியா சுமார் 3.5 கோடி முழுநேர வேலைவாய்ப்புகளை இழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் கட்டுமானம், விவசாயம் மற்றும் தெருவோர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வெப்ப அதிகரிப்பால் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள். இது மாநிலத்தின் உற்பத்தித் திறனைக் கடுமையாகக் குறைக்கும்.
நகரமயமாக்கலும் வெப்பமும்:
தமிழகத்தின் வேகமான நகரமயமாக்கல் 'நகர்ப்புற வெப்பத் தீவு' விளைவை ஏற்படுத்துகிறது. கான்கிரீட் கட்டிடங்கள் மற்றும் மரங்கள் குறைவு காரணமாக நகரங்கள் வெப்பத்தை அப்படியே சேமித்து வைக்கின்றன. இது நகர்ப்புறங்களில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கிறது.
தீர்வு என்ன?
இந்த வெப்ப அபாயத்தைச் சமாளிக்கத் தமிழக அரசு உள்ளூர் அளவிலான 'வெப்ப செயல்திட்டங்களை'வலுப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பொது இடங்களில் நிழற்குடைகள் மற்றும் குடிநீர் வசதிகளை அதிகரித்தல். நகர்ப்புறக் காடுகளை உருவாக்குதல் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்தல். வெப்பத் தாக்கத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க வேலை நேரங்களை மாற்றி அமைத்தல். இயற்கை சமநிலை சீர்குலைந்து வரும் நிலையில், வெப்ப அபாயத்தைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!
கனவுகள் மெய்ப்படும்!
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
பலவண்ணம்!
எதிர்பாராமல் கிடைத்த உதவிக்கு என்றுமே கடமைப்படு!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்
{{comments.comment}}